என் மலர்
நீங்கள் தேடியது "மாட்டு பொங்கலையொட்டி"
- கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
- வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
அதன்படி இன்றும் மாட்டு சந்தை கூடியது. இன்று பசுமாடு, எருமை மாடு, கன்றுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. வெளிமாநில வியாபாரிகளும் அதிக அளவில் கூடி இருந்தனர்.
வரும் திங்கட்கிழமை மாட்டு பொங்கலையொட்டி இன்று மாட்டு சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி, சாட்டை ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக மாடுகளுக்கு அணிவிக்கப்படும் கயிறு, கழுத்து கயிறு, மூக்கணாங் கயிறு, கழுத்து மணி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
கழுத்து மணி சிறியது 20 ரூபாய்க்கும், பெரிய மணி 150 ரூபாய்க்கும், திருகாணி 20 முதல் 50 ரூபாய்க்கும், கழுத்து கட்டி கயிறு 20 முதல் 200 வரைக்கும், சாட்டை 50 முதல் 200 ரூபாய் வரைக்கும், மொளகுச்சி கம்பி 50 முதல் 100 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.