search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமிய கலைப்போட்டி"

    • கிராமிய கலைப்போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • 20 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி மணி நகரில் உள்ள சிதம்பர ஆறுமுகசாமி திருமண மண்டபத்தில் பாரதி இலக்கிய சங்கம், பசுமை தாயகம், மக்கள் தொலைக்காட்சி, மதி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து கிராமிய திருவிழாவை 4 நாட்கள் நடத்தியது. இதையொட்டி நடந்த போட்டிகளில் 20 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் 15 பேர் பங்கேற்றனர்.அதில் 8 பேர் பரிசு பெற்றனர். இதில் குறும்படம் முதல் பரிதை வென்றது. இந்த குறும்படம் ''மனிதமும் மண்ணும்'' என்ற தலைப்பில் கோவில் அர்ச்சகருக்கு ரூ.500 கொடுத்து வழிபாடு செய்யும் நாம் குப்பை பொறுக்கும் ஏழைகளுக்கு ரூ.5 கொடுக்க தயங்குவது ஏன்? என்ற கருத்து இடம் பெற்றிருந்தது.

    பரிசு பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, குழுமத்தின் இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார், கல்லூரி இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் மற்றும் பேராசி ரியர்கள் பாராட்டினர்.

    ×