என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க."

    • நிர்வாகிகள் பொங்கலிட்டனர்.
    • பொதுமக்களுக்கு மேயர் மகேஷ் கரும்புகளை வழங்கினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    அவைத்தலைவர் எப்.எம்.ராஜரத்தினம் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், கூட்டுறவு சங்கத்திற்கு விரைவில் தேர்தல் வர உள்ளது.கூட்டுறவு சங்க பதவிகளை கைப்பற்ற அனைவரும் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில மீனவரணி துணை செயலாளர் நசரேத் பசலியான், துணை மேயர் மேரி பிரின்சி லதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர் மதியழகன், செல்வன், பிராங்கிளின், பாபு, மாநகராட்சி மண்டல தலைவர்கள், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத் தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் பொங்கலிட்டனர். பொதுமக்களுக்கு மேயர் மகேஷ் கரும்புகளை வழங்கினார்.

    ×