search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடீஸ்வரர்கள்"

    • இந்த வருடத்தில் மட்டும் சுமார் 4300 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
    • கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 5100 ஆக இருந்தாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ் (Henley & Partners) சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வெளிநாட்டிற்கு இடம் பெறுவதாக தெரிவித்துள்ளது. மேலும், அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளது.

    இந்த வருடத்தில் மட்டும் சுமார் 4300 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

    கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 5100 ஆக இருந்தாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட இந்தியா, இந்த பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. சீனா முதல் இடத்திலும், இங்கிலாந்து 2-வது இடத்திலும் உள்ளது.

    2024-ல் உலகளவில் 1.28 லட்சம் கோடீஸ்வரர்கள் குடிபெயர்ந்துள்ளனர். இதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவிற்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பு கொண்டவர்களை இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

    பாதுகாப்பு, வரிச் சலுகைகள், ஓய்வூதிய வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள், சாதகமான வாழ்க்கை முறைகள், குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள், சுகாதார அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உட்பட பல காரணத்த்திற்காக இடம்பெயர்கிறார்கள்.

    • தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
    • புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு வலுவான போட்டியை வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.

    இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி சார்பில் நட்சத்திர வேட்பாளர்களும் கோடீஸ்வர வேட்ப்பாளர்களும் அதிகம் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது.

    ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர், அவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடியாக உள்ளது. குறிப்பாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகியுள்ள சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     

    முன்னதாக புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020-ல் 102 ஆக இருந்தது. இதுவே 2022-ல் 166 ஆக அதிகரித்துவிட்டது.
    • நாட்டின் முதல் 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து 54.12 லட்சம் கோடியாக உள்ளது.

    புதுடெல்லி:

    உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 'ஆக்ஸ்பேம் இண்டர்நேஷனல்' அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவில் ஆண் தொழிலாளியின் சம்பளம் ஒரு ரூபாய் என்றால், பெண் தொழிலாளியின் சம்பளம் 63 பைசா என்ற அளவில் தான் உள்ளது. இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020-ல் 102 ஆக இருந்தது. இதுவே 2022-ல் 166 ஆக அதிகரித்துவிட்டது.

    நாட்டின் முதல் 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து 54.12 லட்சம் கோடியாக உள்ளது. இதன் முலம் இந்தியாவின் 18 மாத பட்ஜெட் செலவை எதிர்கொள்ள முடியும். கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடும்போது ஏழைகள் தங்கள் வருமானத்தில் இருந்து அதிக வரி செலுத்துகின்றனர்.

    முக்கியமாக அத்தியாவசியப் பொருள்கள், சேவைகளுக்காக வரி செலுத்துவது அதிகம் உள்ளது. இந்த நிலையை மாற்ற வரி விதிப்பு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வ வளத்தில் 40 சதவீதம் குவிந்துள்ளது. வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் இது அதிகரிக்கவே செய்யும்.

    ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

    ×