என் மலர்
நீங்கள் தேடியது "24 பேர்"
- 180 மதுபாட்டில்கள் பறிமுதல்
- அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந் தது.
குமரிமாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்ட நிலையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியா குமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிசன்க ளுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி யின்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 15 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மது விற்ற 24 பேரை கைது செய்த போலீசார் அவர்களி டம் இருந்து 180 மதுபாட்டில் களை பறிமுதல் செய்துள்ள னர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.