என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் பட்டு சேலை"

    • கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது.
    • காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் என்றாலே பட்டுச்சேலை தான் நினைவுக்கு வரும். சுபகாரியங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வார்கள்.

    கடந்த மாதம் சுபமுகூர்த்த தினங்கள் இல்லை என்பதால் காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து இருந்தது. கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததை தொடர்ந்து சுப மூகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு பட்டுச்சேலை எடுக்க காஞ்சிபுரத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    வெளியூர்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்து வருவதால் பட்டுச்சேலை விற்பனை கடைகள் அதிகம் உள்ள காஞ்சிபுரம் காந்திரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    அனைத்து கடைகளிலும் விற்பனை களை கட்டுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.

    இதற்கிடையே பட்டுச்சேலை கடைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்த உரிய பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம், காந்திரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்த உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் காஞ்சிபுரம் நகர மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:-

    கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது. தற்போது தை மாதம் தொடங்கி உள்ள நிலையில் பட்டு சேலைகள் அமோகமாக விற்பனையாகும். தை மாதம் மட்டும் அறிஞர் அண்ணா பட்டுக்கூட்டுறவு சொசைட்டியில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு சேலைகள் விற்பனையாகும். முகூர்த்த புடவைகளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அவர்கள் வசதிக்கு ஏற்றார் போல் வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலான முகூர்த்த புடவைகள் விற்பனையாகின்றன.

    காஞ்சிபுரத்தில் சுமார் ரூ.100 கோடி வரை பட்டுச்சேலைகள் இந்த தை மாதம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பட்டுச்சேலைகளுக்கு காந்தி ரோட்டில் அதிக அளவில் அரசு சொசைட்டிகள் மற்றும் தனியார் கடைகள் உள்ளன. முக்கிய முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் சேலை வாங்க கார்கள் மற்றும் வாகனங்களில் வருவதால் காந்தி ரோடு பகுதியில் மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர்.
    • இரு தலைப்பட்சி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார். விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.

    மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அம்பானி தம்பதியினர் நேற்று அமெரிக்கா சென்றனர்.

    பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர். அப்போது டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

    மேலும் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகளிலும் அம்பானி தம்பதி கலந்துகொள்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்தது பலரையும் கவர்ந்துள்ளது.

    அவர் அணிந்திருந்த காஞ்சிப்பட்டு சேலையில், காஞ்சிபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், டிரம்ப் விழாவில் காஞ்சிப் பட்டுச் சேலையில் நீடா அம்பானி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.

    ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த சேலை, தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னரும் பல நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலைகளை அணிந்து வளம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    ×