என் மலர்
நீங்கள் தேடியது "அணைக்கு நீர்வரத்து"
- மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.76 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 627 கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 1864 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வருகிறது.
தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1100 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.