என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ைகது"

    • அதே பகுதியை சேர்ந்த ரமணி, முரளி, கணபதி ஆகியோருக்கும் இடையே பொங்கல் தினத்தன்று வழுக்கு மரம் ஏறும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள காமராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமிகண்ணு (வயது34). டிரைவரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமணி, முரளி, கணபதி ஆகியோருக்கும் இடையே பொங்கல் தினத்தன்று வழுக்கு மரம் ஏறும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.

    இது குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து சாமிகண்ணு, ரமணி, கணபதி, முரளி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    • குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது செய்யப்பட்டார்.
    • அதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும்.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இரும்பு பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் திருவள்ளூரை சேர்ந்த பத்மநாபன் (வயது 55) என்பவர் தனக்கு சொந்த மான டிராக்டர் தொழிற்சா லைக்கு பயன்படுத்தும் இரும்பு டிஸ்க் பொருட்களை வைத்திருந்தார்.

    அந்த குடோனுக்கு மேலாளர் கணேசன் ஆய்வு செய்தபோது, இரும்பு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு

    ரூ.60 ஆயிரமாகும். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அந்த குடோனில் திருடிய பொருட்களை இரும்பு கடைகளில் சானாம் பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் எடைக்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×