search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.15 ஆயிரம்"

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • அலைக்கழித்ததால் வழக்கு தொடர்ந்த நுகர்வோர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குலசேக ரன்புதூர் பகுதியைச் சேர்ந்த வர் பாலமுருகன். இவர் தோவாளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நகைைய பாலமுருக னுக்கு தெரியாமல் நிதி நிறுவனம் ஏலத்திற்கு விட முயன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரியவந்ததும் பாலமுருகன் நகையை திருப்ப பணத்துடன் சென்றார்.

    அப்போது அவரை அலைக்கழித்ததுடன், பணம் செலுத்திய நாளில் இருந்து 20 நாட்கள் கழித்து தான் நகையை திருப்பி தரமுடியும் என நிதி நிறுவனம் கூறிய தாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், நிதி நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதன்பிறகும் உதிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி பாலமுருக னுக்கு ரூ.1500 நஷ்ட ஈடு மற்றும் வழக்குச் செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் வழங்க உத்தர விட்டனர்.

    • போலீஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி சோதனை
    • சம்பள பணத்தை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறி கதறி அழுதார்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் லிடியா (வயது 28).

    இவர், நாகர்கோவிலில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை லிடியா வழக்கம்போல் வேலைக்கு வந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தயாரானார். இதையடுத்து அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் சம்பள பணம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. பணத்தை லிடியா தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

    வடசேரியில் இருந்து கூட்டப்புளி செல்லும் பஸ்சில் லிடியா ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் லிடியா கைப்பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதையடுத்து அவர் கூச்சலிட்டார் தனது பணத்தை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறி கதறி அழுதார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

    பின்னர் பஸ் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து போலீசார் பஸ்சில் இருந்த பயணிகள் ஒவ்வொருவரிடமும் சோதனை செய்தனர்.ஆனால் பணம் கிடைக்க வில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு பஸ் மீண்டும் கூட்டபுளிக்கு புறப்பட்டு சென்றது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி லிடியாவிடம் பணம் பறித்தது பெண் கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு அண்ணா பஸ் நிலையத்தில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது.

    இது தொடர்பாக சில பெண்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் மீண்டும் ஓடும் பஸ்சில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

    எனவே இந்த சம்பவத்தில் பழைய கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×