என் மலர்
நீங்கள் தேடியது "வீடு இடிப்பு"
- வன்முறையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக நாக்பூரில் வன்முறை வெடித்தது. மத நூல் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன, இதில் நாக்பூரில் 40 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே வன்முறை சம்பவம் தொடர்பாக பாஹிம் கான் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே வன்முறையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய முதல்-மந்திரி பட்னாவிஸ், வன்முறையால் நகரத்தின் 80 சதவீத பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்று கூறியதை அடுத்து நேற்று ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.
இந்த நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள பாஹிம் கானின் வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு செய்து அதனை செயல்படுத்தி உள்ளது.
சஞ்சய் பாக் காலனியில் உள்ள பாஹிம் கானின் இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி சார்பில் வீட்டை இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 2005 -ம் ஆண்டு அரசு மூலம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது.
- குடியிருந்தவர்களை தாக்கி வெளியே தள்ளியதால் ராணி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
குன்னத்தூர் :
குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிராமம் மைலம்பாளையத்தை சேர்ந்த ராணி என்பவருக்கு கடந்த 2005 -ம் ஆண்டு அரசு மூலம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது. மேற்படி இடத்தில் அவர் குடிசை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
இந்தநிலையில் இடம் தொடர்பான முன்விரோதம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கவுரி ( வயது 50), சாந்தி (50), மாணிக்கம் மூர்த்தி( 65), ராசு (54) மற்றும் அவரது உறவினர்கள் , ராணி குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் ராணி , அவரது மகள் மோகனப்பிரியா (30), ராணியின் பேரன் கணேஷ்(2½) ஆகியோரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
குன்னத்தூர் நில வருவாய் ஆய்வாளர் நிலத்தை அளந்து கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் குடியிருந்தவர்களை தாக்கி வெளியே தள்ளியதால் ராணி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.