search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் தின விழா"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளைஞர் தின விழா நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியை ரூபாதேவி சிறப்புரையாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் சங்கம், கல்வி வட்டம் மற்றும் விவேகானந்த கேந்திரா ஆகியவை இணைந்து இளைஞர் தினத்தை கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியை ரூபாதேவி சிறப்புரையாற்றி னார்.

    சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள் மற்றும் பொன்மொழிகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இதில் 13 பள்ளிகளில் இருந்து 119 மாணவர்கள் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில், சிவகாசி மாணவி லட்சுமிபிரியா முதல் பரிசையும். விருதுநகர் மாணவி ஸ்ரீ கவுரி 2-ம் பரிசையும், தளவாய்புரம் மாணவர் சரண் சாரதி 3-ம் பரிசையும் பெற்றனர்.

    பேச்சுப் போட்டியில் செவல்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி விக்னேஷ்வரி முதல் பரிசையும், விருதுநகர் மாணவி நேகா 2-ம் பரிசையும், தளவாய்புரம் மாணவர் பூமணிகண்டன் 3-ம் பரிசையும் பெற்ற னர். கணிதவியல் துறை உதவி பேராசிரியை அனுபாலா நன்றி கூறினார்.

    ×