என் மலர்
நீங்கள் தேடியது "வருசாபிஷேக விழா"
- வருஷாபிஷேக விழாவில் யாக பூஜைகள் நடைபெற்றது.
- பூஜைகளை சக்தி கணேஷ் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா, களப்பாகுளம் பஞ்சாயத்து களப்பாகுளம்-உடப்பன்குளம் இணைப்புச்சாலையில் ஜக்கம்மாள் கோவில் கீழ்புறம் மஹாசக்தி வாராகி அம்பாள் கோவில் 9-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் ஸ்ரீ வலம்புரி விநாயகர், மஹாசக்தி வராஹி, உன்மத்த பைரவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு யாக பூஜைகளும், தொடர்ந்து கும்ப கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம், மற்றும் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடந்தது.
வருசாபிஷேக பூஜை களை துர்க்கா ப்ரத்யங்கிரா தேவி உபாசகர் சக்தி கணேஷ் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்தனர். இதில் ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துசாமி, தேன்மொழி, செந்தாமரை, அங்கப்பன், சரவணன், கணேசன், சக்திவேல், நகைக் கடை அதிபர்கள் சங்கரசுப்பிரமணியன், அனுசுயா மாரிமுத்து, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, மாணிக்கம், வெங்கடேஷ், ஆதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மனோன்மணி அம்பாள் உபாசகர் சக்திவேல், பரமகணேசன், முருகன், ஜெயராம், பலவேசம் மற்றும் திருச்செந்திலாண்டவர் பாதயா த்திரை குழுவினர்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.