என் மலர்
நீங்கள் தேடியது "திமுக அமைச்சர்கள்"
- தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள்.
- இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது.
மதுரை:
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
இன்றைக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுவிட்டது, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது. போதைப்பொருள் குறித்து அறிவுரை சொன்ன உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் படுகொலை செய்யப்படுகிறார். இது குறித்து நீதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. இது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கடமையாகும்.
கேள்வி நேரம் புரிந்து ஜீரோ ஹவரில் தான் கேள்வியை எழுப்பினோம், சபாநாயகரும் அனுமதி தந்தார். ஆனால் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்லாமல் முறையாக நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று கூறுகிறார்.
நாங்கள் இதை கேள்வி நேரத்தில் கேட்கவில்லை. இது மக்களின் கோரிக்கையாகும். முதலமைச்சர் இதற்கு பதில் பேச மறுக்க காரணம் என்னவென்றால், உதயநிதி பேசும் பொழுது சட்டசபையில் அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்று காவலர்களை வைத்து எங்களை வெளியே தூக்கிப் போட்டனர். ஜனநாயகம் எங்கே போய்விட்டது? சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது.
உதயநிதி சிறப்பாக பேசுகிறார். அழகாக பேசுகிறார் என்று ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை, குற்றம் குறைகளை சுட்டி காட்டும் ஆண்மகனாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். உதயநிதி மானிய கோரிக்கைக்கு காய்ச்சலால் வரவில்லை என்று கூறுகிறார்கள். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த உடன் தி.மு.க. அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துவிட்டது.
தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, நிதி அமைச்சர் அழகு தமிழில் பேசுகிறார். ஆனால் உள்ளே கடன் தான் உள்ளது.
தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள். ஆனால் பார்க்க தான் ஆள் இல்லை. இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசுக்கு திராணி இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும். மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் .
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு அனைவரும் 27-ந்தேதி ஈரோடு சென்று பிரசாரத்தை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
- 11 அமைச்சர்களும் ஈரோட்டில் 27-ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அது மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களான ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஆதரவு கேட்டார்.
இதை தொடர்ந்து இன்று முதல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
ஈரோடு தொகுதியில் நடைபெறும் தேர்தல் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது.
இதற்காக 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது.
இந்த குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அந்தியூர் செல்வராஜ், கோவை நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ. ரவி, தா.உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், சேலம் ஆர்.ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், நல்லசிவம், பத்மநாபன், பா.மு.முபாரக், மதியழகன், ராஜேஸ்குமார், மதுரா செந்தில், பெ.பழனியப்பன், பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி ஆகிய 20 பேர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர்களில் கே.என்.நேரு, முத்துசாமி மட்டுமே ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர். மற்ற அமைச்சர்கள் இன்னும் ஈரோடு செல்லவில்லை.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுவதால் அந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் அமைச்சர்கள் ஈரோடு செல்ல உள்ளனர்.
இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு அனைவரும் 27-ந்தேதி ஈரோடு சென்று பிரசாரத்தை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் 11 அமைச்சர்களும் ஈரோட்டில் 27-ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 280 பூத் (வாக்குச்சாவடி) உள்ளது. அதை 11 அமைச்சர்களுக்கும் பிரித்து கொடுத்து அதற்கேற்ப பணியாற்றுமாறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசார பணிகளை சென்னையில் இருந்தபடி கவனித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 2-வது வாரம் அங்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த தேதியில் பிரசாரத்திற்கு செல்வார் என்ற விவரம் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் அவர்களை விட தி.மு.க.வினர்தான் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பே தி.மு.க. அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஈரோட்டில் 'கை' சின்னத்துக்கு வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தது குறிப்பிடத்தக்கது.
- செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
- காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசுகிறார்.
சென்னை:
காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி சார்பாக, "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி ரோடு, தேரடி அருகில், மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசுகிறார்.
இக்கூட்டத்தில், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
- ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், அமைச்சர்களின் நடவடிக்கைகளால் விமர்சனங்களை பெற்று வருகிறது. மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசும்போது அமைச்சர் பொன்முடி 'ஓசி பயணம்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பின்பு அதற்காக மன்னிப்பு கேட்டதும் நடைபெற்றது.
சமீபத்தில், ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தஞ்சாவூரில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உதவியாளரை ஒருமையில் பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமேடையில் அமைச்சர் தனது உதவியாளரை ***மாடா நீ என திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.