என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திடீர் நெஞ்சுவலி"
- மகேந்திரனுக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது.
- பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
கடலூர்:
சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் (வயது 57) சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்தார். இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வழக்கம் போல சிதம்பரம் மேல ரதவீதி, கீழ ரத வீதிகளில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக போலீஸ் நிலையம் திரும்பினார். அங்கிருந்த காவலர்களிடம் சம்பவத்தை கூறும் பொழுதே மயங்கிய நிலையில் போலீஸ் நிலையத்தில் உள்ள பெஞ்சில் சாய்ந்து விட்டார்.
பணியில் இருந்த போலீசார் அவரை சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பணியில் இருக்கும் போதே இறந்து போன சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு ஒரு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ், உதவி சுப்பிரண்டு ரகுபதி, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் உட்கோட்ட போலீசார்கள் உயிரிழந்த மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்