search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணை"

    • வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு வழி சொல்லுங்கள்.
    • ஏழை எளியவருக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவி செய்.

    ஞானி ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்தார். அந்த கிராமத்திலேயே பெரும் பணக்கார மனிதர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் கஞ்சத்தனம் மிக்கவர். அவர் அந்த ஞானியிடம் வந்து,`நான் என் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு வழி சொல்லுங்கள் ஐயா' என்று கேட்டார்.`நீ, தினமும் ஏழை எளியவருக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவி செய். கருணையே மிகச்சிறந்த இறை வழிபாடு' என்று பதில் சொன்னார் ஞானி.

    பணக்காரர் ஞானியின் அறிவுரையைக் குறைந்தபட்சமாவது பின்பற்றலாம் என்று முடிவெடுத்தார். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு யாசகனுக்கு ஒரு கைப்பிடி அரிசியை தானமாகக் கொடுத்தார். அதை பெருமையோடு அடுத்த நாள் ஞானியிடம் வந்து சொன்னார்.

    அதைக்கேட்டதும் ஞானி, அருகில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடிப்பாகத்தை விரல் நகத்தால் கீற ஆரம்பித்தார். பணக்காரர் குழம்பிப் போய், அவரது செயலுக்கு காரணம் கேட்டார். `நான் நகத்தால் கீறி இந்த மரத்தை வெட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றார் ஞானி.

    பணக்காரருக்குச் சிரிப்பு வந்தது. `இவ்வளவு பெரிய மரத்தை கை நகத்தால் வெட்ட முடியுமா?" என்று கேட்டார். `ஒரு பிடி அரிசியை யாசகனுக்கு கொடுத்து நீ வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும்போது, இவ்வளவு பெரிய மரத்தை கை நகத்தால் வெட்டுவது பெரிய விஷயம் அல்ல" என்றார் ஞானி. பணக்காரருக்குத் தன் தவறு புரிந்தது.

    • சுகவனேசுவரர்‌ சுவாமி கோவில் ‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள கருணை இல்லத்தில்‌ இருந்த சுமார்‌ ரூ.5 லட்சம்‌ உலோகப் பொருட்கள் திருட்டு.
    • கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர்‌ ஒருவரும்‌ , லுங்கி மற்றும்‌ சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும்‌ அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    சுகவனேசுவரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய நெய் டின்கள், அரிசி மூட்டைகள் , உலோகப்பொருட்கள் மற்றும் ஆகியவைகள் கணக்கில் கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுபற்றி தகவல் அளித்ததற்கு உடனடியாக அவைகளை கைப்பற்றி ரசீது போடுவதற்கு சக பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர் ஒருவரும் , லுங்கி மற்றும் சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து உடனடியாக காவல் துறையில் விரிவான புகாரினை அளித்து, துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். கோவிலில் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×