search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விகே சக்சேனா"

    • உடல்நிலையை குறைக்க வேண்டுமென்றே கலோரி உணவுகளை கெஜ்ரிவால் எடுத்துக் கொள்ளவில்லை.
    • ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகு கெஜ்ரிவால் 2 கிலோ எடை குறைந்துள்ளார்- துணை நிலை ஆளுநர்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கதுறை டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும்போது சிபிஐ-யால் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சி செய்கிறது என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கெஜ்ரிவாலின் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாகவும், பலமுறை இவ்வாறு நடந்ததாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.

    இந்த நிலையில் டெல்லி மாநில துணை நிலை ஆளுநரான வி.கே. சக்சேனா கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து சிறைத்துறை கண்காளிப்பாளர் அறிக்கை அடிப்படையில் தலைமை செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அப்போது கெஜ்ரிவால் சிறைக்குள் வேண்டுமென்றே மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை தவிர்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளை தவிர்த்திருக்கலாம். போதுமான அளவு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்பட்ட போதிலும், முதல்வர் கெஜ்ரிவால் உடல்நிலையை குறைக்க குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் அநத் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மருத்துவ பரிசோதனையில் உள்ள வேறுபாட்டை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிய துணை நிலை ஆளுநர் போதுமான கலோரி உணவை எடுக்காததன் காரணமாக கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஜூன் 2-ந்தேதியில் இருந்து 2 கிலோ எடை குறைந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    துணை நிலை ஆளுநர் சக்சேனாவின் குற்றச்சாட்டை திட்டவட்டாக மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி மந்திரி அதிஷி "முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 8 முறைக்கு மேல் 50 mg/dL-க்கு கீழ் வந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கோமா நிலைக்குக் கூட செல்ல முடியும். பிரைன் ஸ்ட்ரோக் ஆபத்து கொண்டது." என்றார்.

     ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சங் சிங் "என்ன வகையிலான ஜோக்கை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் துணைநிலை ஆளுநர் சார்?, ஒரு மனிதன் இரவில் சர்க்கரை அளவைக் குறைப்பானா? இது மிகவும் ஆபத்தானது. துணைநிலை ஆளுநர் சார், உங்களுக்கு இந்த நோய் பற்றி தெரியவில்லை என்றால், அதன்பின் நீங்கள் இது போன்ற கடிதம் எழுதக் கூடாது. அப்படி ஒரு காலம் உங்களுக்கு வராமல் கடவுள் தடுக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    துணைநிலை ஆளுநர் சிமென்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் நீரிழிவு நோயில் நிபுணத்துவம் பெற்றவரா என்பது எனக்குத் தெரியாது என ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    • கவர்னரை வெள்ளிக்கிழமைதோறும் முதல்-மந்திரி சந்திப்பது வழக்கம்.
    • இச்சந்திப்பு சில வாரங்களாக நடக்கவில்லை.

    புதுடெல்லி :

    டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு எடுத்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 16-ந் தேதி, கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும், மந்திரிகளும் பேரணி சென்றனர். ஆனால், கவர்னர் சந்திக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

    கவர்னர், தனக்கு தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்வதாக சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அதை கவர்னர் மறுத்தார். கவர்னரை வெள்ளிக்கிழமைதோறும் முதல்-மந்திரி சந்திப்பது வழக்கம். ஆனால், இந்த மோதலால் இச்சந்திப்பு சில வாரங்களாக நடக்கவில்லை.

    இந்த பின்னணியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று திடீரென அழைப்பு விடுத்தார். மந்திரிகள், 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளார்.

    ஆனால், இந்த அழைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கவில்லை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கவர்னரின் அழைப்புக்கு நன்றி. வெள்ளிக்கிழமை பஞ்சாப் செல்கிறேன். அங்கு 400 மக்கள் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறேன். ஆகவே, வேறு தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கவர்னரை கேட்டுக்கொண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×