search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாப்ட்வேர் தொழில்நுட்பம்"

    • பயோமெடிக்கல் துறையில் சாப்ட்வேர் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • சிறப்பு விருத்தினராக புனே ‘‘பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்’’ தலைமை பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் பயோமெடிக்கல் துறையின் சார்பில் ''பயோமெடிக்கல் துறையில் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு'' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

    துறையின் 3-ம் ஆண்டு மாணவி நூரூல் பெர்த்ஹெஸ் வரவேற்றார். மாணவி சோபியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பயோமெடிக்கல துறையின் தலைவர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருத்தினராக புனே ''பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்'' தலைமை பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், நவீன காலத்தில் பயோமெடிக்கல் துறையின் பங்களிப்பானது சமுதாயத்திற்கும், மருத்துவத்துறைக்கும் மாற்றத்தை ஏற்படுத்திய துறை ஆகும்.

    ஏெனனில் கொரோனா காலக்கட்டத்தில் நோயின் தீவிரத்தை கண்டறிய பி.சி.ஆர். கிட், தடுப்பூசிகள் போன்றவை பயோமெடிக்கல் துறையின் வளர்ச்சிகள் ஆகும். இன்று மருத்துவ துறையில் உள்ள அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளான (இ.சி.ஜி., சி.டி., எம்.ஆர்.ஐ., பல்ஸ் ஆக்சிமீட்டர்) வெப்ப நிலைமானி, ரத்த அழுத்தமானி, புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு கருவி, ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை கருவிகள் அனைத்தும் ''எம்படட்'' தொழில்நுட்ப த்தின் மூலம் கருவிகள் ஆகும்.

    எம்படட் தொழில்நுட்பம் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பைப் பெறுவது எளிதானது என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கீர்த்திகா, காளீஸ்வரி மற்றும் துறையின் பிற பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    ×