என் மலர்
நீங்கள் தேடியது "ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்"
- முதல் அரையிறுதியில் இந்தியாவும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்தும் வென்றது.
- இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
போட்செப்ஸ்ட்ரூம்:
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த முதலாவது அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனை சுவேதா செராவத் 61 ரன்னுடனும், திரிஷா 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 3 விக்கெட்டு வீழ்த்திய பார்ஷவி சோப்ரா ஆட்டநாயகி விருது பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய இங்கிலாந்து 19.5 ஓவரில் 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.4 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
https://www.dailythanthi.com/Sports/Cricket/india-england-clash-in-junior-womens-20-over-world-cup-cricket-final-today-888357
- முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் பிப்ரவரி 2-ந் தேதி மோதுகிறது.
கோலாலம்பூர்:
2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சூப்பர்6 சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா (குரூப் 1), தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 8.00 மணிக்கு தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அடுத்து வந்த வீராங்கனைகள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவினா பெர்ரின் 45 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் பருனிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி பொறுப்புடன் ஆடினர். தொடங்க வீராங்கனை ஜி கமலினி- கோங்கடி த்ரிஷா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய த்ரிஷா 29 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமலினி அரை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 15 ஓவரில் 1 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடக்கிறது.
- இந்தியா மீண்டும் பட்டம் வெல்லுமா?
- இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கோலாலம்பூர்:
2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.
இதில் கோலாலம்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை (பகல் 12 மணி) சந்திக்கிறது.
நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், மலேசியா, இலங்கையையும், சூப்பர் 6 சுற்றில் வங்காளதேசம், ஸ்காட்லாந்தையும் பந்தாடிய இந்திய அணி அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணியில் பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள கோங்காடி திரிஷா (265 ரன்), கமலினி (135) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் அதிக விக்கெட் வீழ்த்தி முறையே முதல் 2 இடம் வகிக்கும் வைஷ்ணவி ஷர்மா (15 விக்கெட்), ஆயுஷி சுக்லா (12), பருனிகா சிசோடியா, ஜோஷிதா, ஷப்னம் ஷகீல் கலக்குகிறார்கள்.
கைலா ரெனேக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, சமோவ், நைஜீரியாவை தொடர்ச்சியாக வீழ்த்தியது. சூப்பர்6 சுற்றில் அயர்லாந்தை வென்றது.
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ஜெம்மா போத்தா, சிமோன் லாரன்ஸ்சும், பந்து வீச்சில் கைலா ரெனேக், மோனலிசா லிகோடி, ஆஷ்லே வான் விக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ள தனது முழு திறனையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி முதல்முறையாக மகுடம் சூட மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் வலுவான இந்திய அணியே மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
- இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இறுதிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கோப்பை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் ஜூனியர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், மலேசியா, இலங்கை அணிகளையும், சூப்பர் 6 சுற்றில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளை இந்திய அணி பந்தாடியது.
தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
- தென் ஆப்பிரிக்கா அணியின் 4 பேர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இறுதிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கோப்பை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் ஜூனியர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு சிமோன் லௌரென்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இவருடன் களமிறங்கிய துவக்க வீராங்கனை ஜெம்மா 16 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்போ மெசோ (10), வேன் வூர்ஸ்ட் (23) மற்றும் ஃபே கௌலிங் (15) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும், நான்கு பேர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கொங்கடி திரிஷா 3 விக்கெட்டுகளையும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா மற்றும் பருனிகா சிசோடியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷப்னம் ஷாகில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.