search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரும் பரபரப்பு"

    • நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்குள் கடும் வாக்குவாதம்
    • இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் கமிஷனர் பொறுப்பு மகேஸ்வரி நகராட்சி பொறியாளர் பாண்டு துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு- பாரூக் அலி :- நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி பாக்கி அதிகமாக உள்ளது ஆனால் இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி யார் யாருக்கு வரி பாக்கி உள்ளது என தெரிவித்தால் அதனை எளிதாக வசூல் செய்வதற்கு ஏதுவாக அமையும் மேலும் வரி தொடர்பாக அதற்கு குழு உள்ளது இதில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக இதுவரை எந்த கூட்டமும் கூட்டவில்லை ஆகையால் வரி வசூல் செய்வதற்கு கவுன்சிலருடன் இணைந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,   ராணி: - நெல்லிக்குப்பம் நகராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைபெற்று வருகின்றது ஆனால் எங்கள் வார்டுக்கு இதுவரை 100 நாள் திட்டப்பணிகள் ஒதுக்கவில்லை இதன் காரணமாக எங்கள் பகுதி மக்கள் எங்களிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் எங்களால் பதில் கூற முடியவில்லை மேலும் எங்கள் பகுதியில் உள்ள குளங்களை தூர்வாராததால் பொதுமக்களிடையே வீண் பிரச்சனை ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தமிழன்:- நகராட்சியில் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள் ஆனால் எங்கள் பகுதிகளில் அதிகளவில் குடிசை வாழ் மக்கள் உள்ளதால் மண் சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார் அப்போது கவுன்சிலர் பூபாலன் , கூட்டம் தொடங்கியதில் இருந்து அதிக நேரம் பேசி வருகிறீர்கள் மேலும் எங்கள் பகுதியிலும் மண் சாலை உள்ளது அதனை தார்சாலையாக மாற்ற வேண்டும். மேலும் நாங்கள் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும் என கூறினார்.  அப்போது முத்தமிழன், எனது வார்டு தொடர்பாக நான் கேள்வி எழுப்பி வருகின்றேன் உங்களுக்கு தார் சாலை வேண்டுமென்றால் கோரிக்கை வையுங்கள் என தெரிவித்தார் அப்போது இருவருக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.     இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கவுன்சிலர் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கொண்டு வந்துள்ள அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்து கூட்டத்தை முடித்தார்  அப்போது பெண் கவுன்சிலரின் கணவர் பிச்சை என்பவர் தி.மு.க. கவுன்சிலர் முத்தமிழனிடம் நகர்மன்ற கூட்டத்தில் அதிக நேரம் நீங்கள் பேசி வருவதால் மற்ற கவுன்சிலர்கள் எப்போது பேசுவார்கள் என கேள்வி எழுப்பினர் . இதில் முத்தமிழன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம். நீங்கள் இதுபோல் இங்கு வந்து பேசக்கூடாது அதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெண் கவுன்சிலர் இலக்கியா கணவர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன் எங்கள் பகுதியிலும் அதிகளவில் குடிசை பகுதி உள்ளது மேலும் மண்சாலை அதிக அளவில் உள்ளது என கேள்வி எழுப்பிய போது மீண்டும் முத்தமிழனுக்கும் சாமிநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கவுன்சிலரான இலக்கியா பேச வேண்டும் ஆனால் இந்த கூட்டரங்கில் கவுன்சிலரின் கணவரான நீங்கள் எப்படி பேச முடியும் என கேள்வி எழுப்பினர். இதில் ஜெயபிரபா மணிவண்ணனுக்கும், சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த ஜெயபிரபா மணிவண்ணன் கணவர் திமுக நகர செயலாளர் மணிவண்ணன் இதனை தட்டி கேட்டபோது மணிவண்ணனுக்கும் சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    ×