search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஹித் சர்மா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 1017 ரன்கள் அடித்துள்ளார்.
    • ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் 888 ரன்கள் அடித்துள்ளார்.

    நடப்பாண்டில் சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

    2024 ஆம் ஆண்டில் அனைத்துவித கிரிக்கெட்டிலும் சேர்த்து 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 1017 ரன்கள் அடித்துள்ளார். இதில், ஒரு இரட்டை சதம், 2 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும்.

    இப்பட்டியலில் குசல் மெண்டிஸ் (888*), இப்ராஹிம் சத்ரான் (844*) ரோஹித் சர்மா (833*) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

    • விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை.
    • கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அமெரிக்கா செல்லவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், ஜடேஜா, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் முதல் கட்டமாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

    விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை. அடுத்தக்கட்ட வீரர்களுடன் அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அதனால் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

    இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்களை குவித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.

    விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். பாபர் அசாமும் இந்த லிஸ்ட்டில் உள்ளார். இவர்கள் தவிர ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர் ஆகிய அதிரடி வீரர்களும் தலைசிறந்த வீரர்களே. ஆனால் அந்த டாப் 4-ல் இவர்கள் பெயர் இல்லை.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்கள், டெஸ்ட்டில் 27 சதங்கள் மற்றும் டி20-யில் ஒரு சதம் என மொத்தம் 74 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 4 சதங்கள் அடித்தால் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பாரா என்பதுதான் பெரும் விவாதமாக உள்ளது.

    இந்திய அணியில் விராட் கோலிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ரோகித் சர்மா. சொல்லப்போனால் அவரைவிட மாபெரும் இன்னிங்ஸ்களை ஆடி அசத்தியவர் ரோகித். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்களை குவித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.

    இருவருமே திறமையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல. ஆனால் விராட் கோலி தான் தலைசிறந்த வீரர் என்று கொண்டாடப்படும் நிலையில், விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொஹைல் கான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ரோகித் சர்மா அவரை விட சிறந்த பேட்ஸ்மேன். டெக்னிக்கின் அடிப்படையில் கோலியை விட ரோகித்தே சிறந்த வீரர். ரோகித் பந்தை வரவிட்டு தாமதமாக ஆடுவதால் அவருக்கு ஷாட் ஆட கூடுதல் நேரம் கிடைக்கிறது. கடந்த 10-12 ஆண்டுகளாக ரோகித் சர்மா தான் சர்வதேச கிரிக்கெட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு சொஹைல் கான் தெரிவித்துள்ளார்.

    ×