என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்கருகி பலி"

    • எதிர்பாராத விதமாக சஸ்விதாவின் பட்டுப் பாவாடையில் தீ பற்றியது.
    • தீ மளமளவென பரவியதில் சஸ்விதாவின் வயிற்றுக்கு கீழ் தீக்காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூரை அடுத்துள்ள கிழக்கு புதூரை சேர்ந்தவர் சரவணன் (48). விவசாயி. இவரது மகள் சஸ்விதா (7). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி மாலை பொல்லநாயக்கன் பாளையத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டின் பூஜை அறையில் உள்ள விளக்கில் மத்தாப்பூ பற்ற வைத்துள்ளார்.

    இதில் எதிர்பாராத விதமாக சஸ்விதாவின் பட்டுப் பாவாடையில் தீ பற்றியது. தீ மளமளவென பரவியதில் சஸ்விதாவின் வயிற்றுக்கு கீழ் தீக்காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடியாக சிறுமி சஸ்விதாவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சஸ்விதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×