என் மலர்
நீங்கள் தேடியது "அடிக்கல் நாட்டும்விழா"
- தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டினார்.
- இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட அரும்பூர் கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா யூனியன் சேர்மன் முகமது முக்தார் தலைமையில் நடந்தது.
கவுன்சிலர் கதிரவன், வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சசிகுமார் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.