என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி விழாவில் அசத்திய டி.வி. நடிகர்"
- மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்
- தியாகி அண்ணாமலை பள்ளி 52-வது ஆண்டு விழா நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 52-வது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார். முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கி.காளிதாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயக்குமாரி ஆகியோர் முன்னலை வகித்தார்.
பள்ளியின் 52-வது ஆண்டு விழாவில் கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சின்னதிரை நடிகர் டி.சித்து, சின்னத்திரை ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி பின் பேசினார்.
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி 52வது ஆண்டு விழாவில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் நல்ல நிலையில் உள்ளார்கள் எனவும், இவர்களை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு பயிற்சியும் பல நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும் என சின்னத்திரை நடிகர் டி.சித்து பேசினார்.
விழாவில் தேசிய விருது பெற்ற சார்லி சாப்லின் ஆப் இந்தியா யோனாவின் மேஜிக்ஷோ நடைபெற்றது.
முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மு.சண்முகம் நன்றி கூறினார்.
இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.வெங்கடேசன், இசைஆசிரியர் டி.பாரதி, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.