search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமலை நாயக்கர்"

    • மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • மேலும் அரசு சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    மன்னர் திருமலைநாயக்கரின் 440-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது உருவசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், முருகேசன் ஆகியோர் தலைமையில் இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலையில் ஊர்வலமாக வந்து திருமலை நாயக்கரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்தநிகழ்ச்சியில் நிர்வாகிகள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன், மாணவரணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், அம்மா பேரவை மாநில இனை செயலாளர் குணசேகரன், மாணவரணி மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், சோலை இளவரசன், ரகுதேவன், மீனவரணி ராமநாதன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி உசிலை பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார்.

    இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் சிவா, கொடிவைரன், யோகராஜ், துதி திருநாவுகரசு, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன், சிதம்பரம், ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், அர்ஜுனன், நாச்சியப்பன், புல்லட் ராமமூர்த்தி, கிரி சாத்தன உடையார், பத்ரி முருகன், முருகவேல், இன்பம், ஆரைக்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×