என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீ மிதித்தல்"
- சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
- இதை முன்னிட்டு இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவிலில் தை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை மாரியம்மன் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நாளை மாலை சக்தி அழைத்தல் மற்றும் அம்மனுக்கு கும்பம் போடுதல், 8-ந் தேதி கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி வண்டி வேடிக்கையும், 10-ந் தேதி மாரியம்மன் கோவில் திடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
11-ந் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சிறப்பிக்கும்படி கோவில் நிர்வாக கமிட்டியினர் கேட்டுக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்