என் மலர்
நீங்கள் தேடியது "குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணி"
- குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு
- நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டராக பி.என். ஸ்ரீதர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர்அலுவலகத்தில் அனைத்து துறை அதி காரிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற் கொண்டார். கூட்டத்தில் கலெக்டர் பொறுப்புகளை ஒப் படைத்த அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், சப்-கலெக்டர் கவுஷிக், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி மாநகர நல அதிகாரி ராம்குமார், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டர் குணால் யாதவ், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கேட்டறிந்தார். குடிநீர் திட்ட பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.