search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஸ்ரீதர்"

    • இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளதா? என்ற விவரத்தை கேட்டறிந்தார்.
    • பொருட்களின் அளவு சரியாக வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ரேசன் கடையில் கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேசன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அரிசி, பருப்பு, சீனி, மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த கலெக்டர் பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டார்.

    மேலும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளதா? என்ற விவரத்தையும் கேட்ட றிந்தார். இதைத் தொடர்ந்து புதுகுடியிருப்பில் உள்ள ரேசன் கடைக்கு சென்ற கலெக்டர் ஸ்ரீதர் அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் அளவு சரியாக வழங்கப் பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பொருட்களின் இருப்பு விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது சமூக பாதுகாப்பு தனி துணை ஆட்சியர் திருப்பதி, அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அணில் குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இலவச வேட்டி-சேலை வழங்கிய விபரங்களை கேட்டறிந்தார்
    • பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்ட ராக பி.என். ஸ்ரீதர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து இன்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இதை தொடர்ந்து விளவங் கோடு தாலுகா அலுவ லகத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.அப் போது விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் எத்தனை ரேசன் கடைகள் உள்ளது? எத்தனை கிராம ஊராட்சிகள் உள்ளது? என்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ரேசன் கடைகள் மூலமாக இலவச வேட்டி சேலை முறையாக வழங்கப பட்டு வருகிறதா? எத்தனை பேருக்கு வழங்கப் பட்டுள்ளது என்ற விவரங்க ளையும் கேட்டறிந்தார்.

    பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது சப்- கலெக்டர் கவுஷிக், விளவங்கோடு தாசில்தார் பத்ம குமார், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு
    • நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டராக பி.என். ஸ்ரீதர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர்அலுவலகத்தில் அனைத்து துறை அதி காரிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற் கொண்டார். கூட்டத்தில் கலெக்டர் பொறுப்புகளை ஒப் படைத்த அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், சப்-கலெக்டர் கவுஷிக், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி மாநகர நல அதிகாரி ராம்குமார், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டர் குணால் யாதவ், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கேட்டறிந்தார். குடிநீர் திட்ட பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    ×