என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி கோதண்டராமசாமி கோவில்"
- சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- ஊஞ்சல் சேவை நடந்தது.
திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குப்பசந்திரபேட்டை உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குப்பசந்திரபேட்டை உற்சவம் நடத்தப்பட்டது. அதற்காக நேற்று காலை 6 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமர் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டனர்.
மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க திருப்பதி அருகே 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்பசந்திரபேட்டை கிராமத்துக்கு காலை 9.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு காலை 10 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மாலை ஊஞ்சல் சேவை நடந்தது. அங்கிருந்து உற்சவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தனர். சாமி ஊர்வலத்தினபோது இந்து தர்ம பிரசார பரிஷத், தாச சாகித்திய திட்டங்களின் கீழ் பஜனை மற்றும் கோலாட்டங்கள் நடந்தன.
உற்சவத்தில் சின்ன ஜீயர் சுவாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
- 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 28-ந்தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. மார்ச் மாதம் 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 19-ந்தேதி இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது.
20-ந்தேதி கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை சின்னசேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
24-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கருட வாகன வீதிஉலா, 25-ந்தேதி காலை அனுமன் வாகன வீதிஉலா, யானை வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 28-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
ேமற்கண்ட வாகன வீதிஉலா காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணனுடன் இணைந்தும் வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
- 17-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
- 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் சிறு புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டிகள், சிறு புத்தகங்களை வெளியிட்டார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 19-ந்தேதி பிரம்மோற்சவத்துக்காக அங்குரார்ப்பணம் நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கின்றன.
இதேபோல் ராமநவமி விழா 30-ந்தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரையிலும், தெப்போற்சவம் ஏப்ரல் மாதம் 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரையிலும் நடக்கிறது.
- 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
திருப்பதி கோதண்டராம சாமி கோவிலில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 22-ந் தேதி உகாதி ஆஸ்தானம், 24-ந் தேதி கருட சேவை, 25-ந் தேதி அனுமன் வாகனம் நடக்கிறது.
31-ந்தேதி சீதாராமர் திருக்கல்யாணம், 30-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வரை ராமநவமி உற்சவமும், ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தெப்போற்சவமும் நடைபெறவுள்ளது.
கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர், மோர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
- பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், குத்து விளக்குகள் தூய்மைப்படுத்தப்பட்டது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
முன்னதாக நேற்று அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, சஹஸ்ர நாமர்ச்சனை நடந்தது. அதன் பிறகு மூலவர்கள் மீது பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு காலை 6.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்து மகா துவாரம் வரை அனைத்துச் சன்னதிகளும், தூண்கள், மாடங்கள், சுவர்கள், மேற்கூரைகள் என அனைத்தும் தூய தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், குத்து விளக்குகள் தூய்மைப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மஞ்சள், குங்குமம், சந்தனம், சீயக்காய், நாமக்கட்டி, பச்சை கற்பூரம், கிச்சிலி கட்டை, கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது போன்ற நறுமணப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சுகந்த திரவியம் மூலவர் கருவறை சுவர்கள், மாடங்கள், மேற்கூரைகள், தூண்கள் ஆகியவற்றில் பூசப்பட்டது. அதன்பின் மூலவர் மீது போர்த்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்புப்பூஜைகள் செய்து, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் கோவில் துணை அதிகாரிகள் நாகரத்தினா, கோவிந்தராஜன், உதவி அதிகாரி மோகன், கோவில் சூப்பிரண்டு ரமேஷ், அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி கோதண்டராமர் கோவிலுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர் பிரசன்னாரெட்டி மற்றும் திருப்பதியைச் சேர்ந்த பக்தர் மணி ஆகியோர் 4 படுதாக்கள் மற்றும் திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினர்.
- பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- நாளை காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை, மிருதங்கரஹணம், அங்குரார்ப்பணம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து நாளை காலை 8.45 மணியில் இருந்து காலை 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கிறது.
வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று அங்குரார்ப்பணம் நடந்தது.
- இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை, மிருதங்கரஹணம், அங்குரார்ப்பணம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கிறது.
வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9.30 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து பகல் 12 மணி வரை கல்யாண மண்டபத்தில் கோதண்டராமர், உற்சவர்களான சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
இரவில் ஹம்ச வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருப்ராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று கருட சேவை நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் கோதண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை மடாதிபதிகளான பெரிய ஜீயர், சின்ன ஜீயர், கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன், கங்கணப்பட்டர் ஆனந்தகுமார் தீட்சிதர், கோவில் கண்காணிப்பாளர் ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ், சலபதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கில் கோதண்டராமர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். இரவு சிகர நிகழ்ச்சியாக கருட வாகனத்தில் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
- அலங்காரம் செய்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் கோதண்டராமர், 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7 மணியளவில் கருட சேவை நிகழ்ச்சி தொடங்கியது. அதில் உற்சவர் கோண்டராமர் தங்கம், வைர நகைகள் அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி இரவு 10 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
- இன்று சூரிய பிரபை, சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9,30 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.