என் மலர்
நீங்கள் தேடியது "கலெக்டர் ரவிச்சந்திரன்"
- களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராக சிவசங்கரியும், துணைத் தலைவராக மரகதம் என்பவரும் உள்ளனர்.
- விசாரணையில் களப்பாகுளம் பஞ்சாயத்தில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராக சிவசங்கரியும், துணைத் தலைவராக மரகதம் என்பவரும் உள்ளனர். இந்த பஞ்சாயத்தில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள ப்பட வில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தென்காசி மாவட்ட கலெக் டரிடம் தொடர்ந்து வந்தது.
குற்றச்சாட்டு
இதனையடுத்து சங்கரன்கோவில் வட்டார மண்டல அலுவலர் ராஜா மணி மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன் ஆகியோரை விசாரணை அதிகாரிகளாக நியமித்து விசாரணை நடத்த கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
அவர்கள் நடத்திய விசாரணையில் களப்பாகுளம் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அதிகாரம் பறிப்பு
இது குறித்த அவர்கள் அளித்த அறிக்கையின் பேரில் கலெக்டர் ரவிச்சந்திரன் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மற்றும் துணைத் தலைவர் மரகதம் ஆகியோர்களுக்கு காசோலை கள் மற்றும் பி.எப்.எம்.எஸ். என்ற பணம் வழங்கும் ரசீதுகளில் கையெழுத்து இடும் அதிகாரத்தை பறித்து அதனை சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கினார். பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் நடைபெறாததால் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது கலெ க்டர் அதிரடி நடவ டிக்கை எடுத்து மேற்கொண்ட சம்பவம் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறும்போது, சங்கரன்கோவில் நகராட்சி எல்லையின் அருகில் களப்பாகுளம் பஞ்சாயத்தின் பெரும்பாலான பகுதிகள் அமைந்துள்ளது. தனி கிராம பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் அடிப்படை வசதிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் என்பதால் எம்.எல்.ஏ. இந்த விஷயத்தில் அக்கறை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும்.
- உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும் முதல்- அமைச்சரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்ப தாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர் ஆவர்.
இந்த விருதுக்கு தென்காசி மாவட்டத்தை சார்ந்த துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான வர்களுக்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன.
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது க்கான விண்ணப்பங்கள் / பரிந்து ரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணைய தளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கி யதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகப்ட்சம் 800 வார்த்தை களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவர ங்களும் முறையாக நிரப்பப்படு வதை உறுதி செய்ய வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பி ப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இணைய தளத்தில் பெற ப்படும் விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்ப ங்கள் கண்டி ப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பெற்றுக்கொண்டார்.
- கலெக்டரிடம் 300 மனுக்களையும் சிவபத்மநாதன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு ஒன்றியம், நகரம், பேரூர்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது.
அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பெற்றுக்கொண்டார். அதில் பொது மக்களின் கோரிக்கைகளான முதலியார்பட்டி ஊராட்சி இந்திராநகர், வாகைகுளம், கடையம் பெரும்பத்து ஊராட்சி சபரி நகர் பகுதியைசேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில் பகுதிநேர ரேஷன் கடை வேண்டியும், அங்கபுரம் பொதுமக்கள் புதிய ரேஷன் கடை கட்டிடம் வேண்டியும் மற்றும் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ -மாணவிகள் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி வேண்டியும், கடையம் ஒன்றியத்தில் மேற்கு பகுதியில் வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படுகிற பாதிப்பை தடுக்க கோரியும், கடையம் முதல் ராமநதி அணை வரை செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலையை சீர் செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மின்மோட்டார் வாகனம், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை வேண்டியும் பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுத்த 300 மனுக்களை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வழங்கினார்.
- மத்திய அரசு இளைஞர்களின் நலன்கருதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
- இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசும் பல்வேறு வகையில் வங்கிக் கடன் வழங்கி வருகிறது.
தென்காசி:
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சார்பாக தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா நடைபெற்றது.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-
மத்திய அரசு இளைஞர்களின் நலன்கருதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. அவற்றை பயன்படுத்தி இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசும் பல்வேறு வகையில் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. எனவே அவற்றை பயன்படுத்தி முறையாக அணுகி தொழில் முனைவோராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் பராசக்தி கல்லூரி முதல்வர் ஜெயினிலா சுந்தரி, மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன், கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் இந்திய அரசு மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சேவை, ஏழைகள்நலன், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளடக்கிய புத்தங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, வாங்கி சென்றனர்.
தொடர்ந்து பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டிகளும் மதியம் கிராமிய குழு நடனமும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத வராக இருக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
உதவித்தொகை
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 10-ம் வகுப்பில் தோல்வி யுற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வங்கி கணக்கில்....
இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.சி. (ஏ), எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், பி.சி., பி.சி.எம்., ஓ.சி. பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி விண்ணப் பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத வராக இருக்க வேண்டும்.
வயது உச்ச வரம்பு
மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்த வர்களுக்கு மாதம் ரூ. 600- பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகள், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்ற வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது . எனி லும், தொலை தூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அடையாள அட்டை
தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை (பழையது), மற்றும் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் மூலம் பெறப் பட்ட 'பிரிண்ட் அவுட்கள்' போன்ற வற்றுடன் அலு வலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்ப கத்திற்கு நேரில் வருகை புரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தின் மூலமா கவும் பொது, மாற்றுத்திற னாளிகள் அவர்க ளுக்குரிய விண்ண ப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, பொதுப் பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்க ப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றம் வருவாய் ஆய்வாளர் அவர்களின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலை வாய்ப்பு அடையாள அட்டை (பழையது மற்றும் ஆன்லைன் பிரிண்ட் அவுட்), அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சா ன்றிதழ் (டி.சி), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போட்டிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
- வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை மறுநாள்( செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் பங்கு பெறலாம்.
போட்டிக்கான தலைப்புகள்.
கட்டுரை போட்டி - தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்.
பேச்சுப் போட்டி - தமிழ்த் திரை உலகத்தை புரட்டி ப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம்,3-வது பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுதொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, 0462- 2502521 என்ற தொலைபேசி எண்ணி லோ தொடர்பு கொள்ளலாம்.இந்த போட்டிகளில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.
- தென்காசி, சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்தினை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தென்காசி:
தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை பொது சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நியாய விலையில் தக்காளி கிடைக்கும் வகையிலும், தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு இடைத்தரகர் இன்றி நியாயமான விலை கிடைக்கும் வகையிலும் உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்தி விலையை கண்காணிக்க தென்காசி மாவட்ட கலெக்டர் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மற்றும் சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்தினை அதிகப்படுத்தவும், நியாயமான விலையில் தக்காளி கிடைக்கவும் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினரோடு இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் உன்னத திட்டமான உழவர் சந்தைகளை தக்காளி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தென்காசி, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. முகாமில் விண்ணப்பித்தல், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, வங்கி கடன், சுய தொழில் தொடங்குதல், பாதுகாப்பு தொடர்பான 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முகாமில், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மையநிர்வாகி ஜெயராணி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் சதாசிவன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வீரவேல், கூட்டுறவுத் துறை மேலாளர் ரெனிஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர்நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ரவிச்சந்திரன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- நிகழ்ச்சியில் மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, தாசில்தார் முருகுசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின் 137-வது பிறந்த தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷணன் பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, தாசில்தார் முருகுசெல்வி, முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்எம். ரஹீம், நகர்மன்ற உறுப்பினா்கள் முருகையா, மேரி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் குட்டிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை உள்பட மொத்தம் 375 மனுக்கள் பெறப்பட்டது.
- மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
வீட்டுமனை பட்டா
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 375 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது.
இதில் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடை பெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மின்களம் பொருத் தப்பட்ட 4 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் மூலம் கருணை அடிப்படையில் 2 பேருக்கு அங்கன்வாடி பணியாளருக்கான பணி நியமன ஆணையினையும் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, உதவி கமிஷனர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாரியப்பன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணி யன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
2023-24 நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் (ஓ.பி.சி., இ.பி.சி., டி.என்.டி.) ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ரூ. 1 லட்சம் வரை
9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இத்தேர்விற்கு வருகிற 10-ந் தேதிக்குள் https://vet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.
இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும்.
இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yct.ntn.ac.in மற்றும் http://socinljustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டி பேசினார்.
- விழாவில் புளியரை ஊராட்சி தலைவர் அழகிய சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
காந்தியடிகளின் கனவின்படி அடிப் படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்தை தத்தெடுத்து கிராம பணி களை அகில இந்திய காந்திய இயக்கம் மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி பொது நூலகம் திறப்பு விழா நடை பெற்றது. அகில இந்திய காந்திய இயக்கத்தின் தலைவர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகையில், அடிப்படை வசதி இல்லாத குக்கிராமமான செங்கோட்டை அருகே உள்ள புளியரை அடுத்து இருக்கும் மடத்தரை பாறையில் கிராம மக்கள் பொதுநூலகம் வேண்டு என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பொது நூலகம் ஒன்று அகில இந்திய காந்திய இயக்கம் கட்டிக் கொடுத்துள்ளது. அதன் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடந்தது என்றார்.
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பொது நூலகத்தை திறந்து வைத்து மகாத்மா காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று பாராட்டி பேசினார். தலைமையேற்ற அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தன் பேசும்போது, எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தை தத்தெடுத்து அரசு உதவியுடனும் மற்றும் காந்தி அன்பர்கள் உதவியு டனும், மக்கள் உதவியுடனும், சிறப்பான காந்திய பணி களை மேற்கொள்ளப்போ வதாக கூறினார். விழாவில் புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய சிற்றம்பலம், காந்தியவாதிகள் ராம் மோகன், முத்துசாமி, விஜய லட்சுமி, திருமாறன், அன்பு சிவன், நாகராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.