search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரநாராயண சுவாமி கோவில்"

    • 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இக்கோவிலில் குடமுழுக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்றது சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில்.

    இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின் 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அப்போது நடைபெறவில்லை.

    இதைத்தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் குடமுழுக்குத் திருவிழாவை யொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இதில் தினமும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் குடமுழுக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    இதற்காக கோவில் உள் பிரகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. மேலும் ஆச்சார்ய விஷேச சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகிய வற்றுடன் 2-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

    பின்னர் மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஆச்சார்ய விஷேத சந்தி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் பூஜைகளுடன் 3-ம் மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று காலை பரிவார யாகசாலையில் மகாபூர்ணா குதி, தீபாராதனை முடிந்ததும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதான யாக சாலையில் மஹாபூர்ணாகுதி, உபச்சாரங்கள் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 5 மணிக்கு மேல் மங்கள வாத்தியம், 5.30 மணிக்கு வேத பாராயணம், காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 6:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

     

    காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9 மணிக்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 9.20 மணிக்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயணசாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் மூர்த்தி, தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அ.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அல்லி ராணி அய்யாத்துரை பாண்டியன், அறங்காவல குழு தலைவர் சண்முகையா அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.

    • சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை பக்தர்களிடையே ஏற்பட்டது.
    • 9-ம் திருநாளான ஜூலை மாதம் 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் ஆடித்தபசு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆடித்தபசு திருவிழா

    முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை பக்தர்களிடையே ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரே என்று காட்சி அளிக்க வேண்டி கோமதி அம்பாள் ஒற்றை காலில் தவசு இருந்தார்.

    அம்பாளின் வேண்டு கோளை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    இந்த அரிய நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக ஆண்டுதோறும் கொண் டாடப்பட்டு வருகிறது.

    ஜூலை 21-ந்தேதி

    இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா அடுத்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் 9-ம் திருநாளான ஜூலை மாதம் 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாளான (31-ந்தேதி) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நிகழ்ச்சி நடக்கிறது.

    • சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2020-ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.
    • கோவில் ராஜகோபுரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2008-ம் ஆண்டு நடந்தது. அதனைத் தொடர்ந்து 2020-ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் தள்ளிப் போனது. இதனால் ராஜா எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கும்பாபிஷேகம் மற்றும் ஆயிரம் ஆண்டு விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதுகுறித்து அறநிலை யத்துறை சார்பில் சங்கரன் கோவில் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.7.50 கோடி செலவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் கோவிலில் செப்பணிட திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு குடமுழுக்கு 2023-ம் ஆண்டுக்குள் நடத்திடவும்,

    மேலும் கோவிலின் ஆயிரமாவாது ஆண்டு விழாவும் நடத்தப்படும் என அறிவித்தார். மேலும் கும்பாபிஷேக பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது கோவில் விமானங்கள் ராஜகோபுரம் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளது. கும்பாபிஷேக பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், மாணவரணி கார்த்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த குமாஸ்தாமுருகன், வீராசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.
    • சங்கரன்கோவில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.

    தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதால், அந்த பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்கரன்கோவில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் தங்கத்தேருக்கு முலாம் பூச உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நாளை நடைபெற உள்ள தெப்பத்திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, மண்டல இணை ஆணையர் அன்புமணி, சுசீந்திரம் துணை ஆணையர் ஞானசேகரன், சங்கரன்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×