search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்"

    • எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஜோகனஸ்பெர்க்:

    எஸ்.ஏ டி20 கிரிக்கெட் லீக் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார்.

    சன்ரைசர்ஸ் அணி சார்பில் ரோலோப் வான் டெர் மெர்வே 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 136 ரன்கள் இலக்குடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி களமிறங்கியது.

    அந்த அணி 16.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஆடம் ரோசிங்டன் 57 ரன் எடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது ரோலோப் வான் டெர் மெர்வேக்கும், தொடர் நாயகன் விருது மார்கிராமுக்கும் அளிக்கப்பட்டது.

    • எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நாளை மாற்றப்பட்டுள்ளது.
    • இதில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.

    செஞ்சூரியன்:

    எஸ்.ஏ டி20 கிரிக்கெட் லீக் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் சந்தித்தன. இதில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    ஜோகனஸ்பர்க்கில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுவதாக இருந்தது.

    இந்நிலையில், அங்கு மழை பெய்ததால் போட்டி தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (12-02-2023) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன.
    • இறுதிப் போட்டிக்கு பிரிட்டோரியா, சன்ரைசர்ஸ் அணிகள் முன்னேறின.

    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், பெர்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்ல் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரூசோவ் 56 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய பெர்ல் ராயல்ஸ் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இரண்டாவது அரையிறுதியில், ஜோபர் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிராம் அதிரடியாக ஆடி சதமடித்து அவுட்டானார்.

    தொடர்ந்து ஆடிய ஜோபர்க் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 96 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா, சன்ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன.

    ×