என் மலர்
நீங்கள் தேடியது "தூக்கமின்மை"
- முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது, சவால்கள் நிறைந்தது.
- ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை.
முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல, சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும், தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.
ஏமாற்றங்களும், பிரிவுகளும், இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்த தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.
மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், சுற்றத்தை விட்டு விலகுவார்கள், நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள், வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.
இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு மேலோங்கி உள்ள பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பள்ளி குழந்தைகளுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாறி வரும் பழக்கவழக்கங்கள் தான். மனஅழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள் இதோ....
மனஅழுத்தம்:
சில வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வது மூலம் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோன் எண்ணிக்கையை குறைக்கலாம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் நாம் வேலை என்றே ஓடி கொண்டிருக்கிறோம். நம்மை நாமே பார்த்துக்கொள்ள கூட நேரமிருப்பதில்லை.
சிறிதும் ஓய்வின்றி வேலைகள் செய்வதால் கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. வயதிற்கு மீறிய சுமைகளை அவர்கள் மீது சுமத்தும் போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை. இதனை விரட்ட சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும்.

தவிர்க்கும் முறை:
* உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். தினமும் காலையில் மூச்சு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து உடலும் மனமும் லேசாகும்.
* வீட்டிலேயே முடங்கி கிடப்பதை விட்டுவிட்டு சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்தையும் கவனித்துக் கொண்டு நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் சற்று குறையும்.
* ஓய்வாக இருக்கும் வேளைகளில் உங்களுக்கு பிடித்த பாடலை கேளுங்கள். இது மனதிற்கு ஆறுதல் அளிப்போதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.
* மனஅழுத்தத்தின் போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது வயிறு குலுங்க சிரிப்பதால் அந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மூளையை தூண்டுவதற்கு உதவும். எனவே வயிறு குலுங்க சிரித்து பழகுங்கள். மனஅழுத்தம் குறையும். உங்களை சிரிக்க வைப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்களிடம் அதிகமாக பழகுங்கள்.
* இனிப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு வருவதால் மனஉளைச்சலை தூண்டும் ஹார்மோன்கள் குறைக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாக்லேட் போன்ற இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு வந்தால் மனஅழுத்தம் குறையும்.
- தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
- நமது மூளையில் சூப்பர் கிளாக் என்ற ஒரு பொருள் உள்ளது.
இன்றைய உலகில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். அதிலும் நிறைய பெண்கள் மற்றும் ஆண்கள் இரவுநேர வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாது இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. முடிகொட்டுதலில் தொடங்கி, ஹார்மோன் மாற்றம், ஸ்கின் பிராப்லம்ஸ் மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல், மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அது குறித்த பதிவுகள் உங்களுக்காக...

இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். நமது மூளையில் சூப்பர் கிளாக் (suprachiasmatic nucles) என்ற ஒரு பொருள் உள்ளது. அது ஹைப்போதாலமஸ் என்ற இடத்தில் உள்ளது.
இது சூப்பர் கிளாக் கொடுக்கும் சிக்னல் மூலமாகத்தான் ஹார்மோன்ஸ் மற்றும் அனைத்து சிஸ்டமும் வேலை செய்கிறது. இந்த சூப்பர் கிளாக்குக்கான பவர் எங்கிருந்து கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா...? சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்துதான். ஏனென்றால் சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்து தான் செரோட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இரவில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது.
இந்த சூப்பர் கிளாக்குக்கு சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்தில் தூங்காமல் உடலுக்கு கொடுக்கும் செயற்கையான வெளிச்சத்தால் உடலுக்கு எந்த சிக்னலும் கிடைக்காமல் போய்விடுகிறது.
எனவே உங்களுக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் இந்த சூப்பர் கிளாக்குக்கு சரியான சிக்னல் கிடைக்காது. இதனால் அந்த ஹார்மோன்கள் வேலை செய்யாது. சரியான சிக்னல் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் சர்க்காடியன் ரிதம் ஹார்மோன் (circadian rhythm) வேலை செய்யாது.
இதனால் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பிரச்சினை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பிரச்சினை வர அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே இவ்வளவு துல்லியமாக வேலை செய்யும் சூப்பர் கிளாக்குக்கு மதிப்பளித்து இரவு 7 முதல் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
- மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது.
- உடலின் ஐந்து உறுப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை பராமரிக்கிறது.
ஆரோக்கியமாக இருக்க, நல்ல மற்றும் போதுமான தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கை தவிர, இரவு நேரங்களில் மொபைலில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதால் தூக்கமின்மை பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. நல்ல தூக்கம் இல்லாததால் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.
நல்ல உறக்கத்திற்கு பல யோகா முத்திரைகள் உள்ளன. இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. தூக்கமின்மையில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஹக்கினி முத்ராவைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹாகினி முத்ரா என்பது ஹஸ்த முத்ரா. இது கைகளால் செய்யப்படுகிறது. இதன் மூலம், உடலின் ஐந்து கூறுகளான காற்று, நெருப்பு, நீர், பூமி மற்றும் ஆகாயம் ஆகியவை சமநிலையில் இருக்கும். ஐந்து விரல்கள் இந்த ஐந்து உறுப்புகளின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
இதில், ஆள்காட்டி விரல் காற்றின் குறியீடாகவும், நடுவிரல் வானமாகவும், மோதிர விரல் பூமியாகவும், கட்டை விரலை நெருப்பாகவும், சுண்டு விரை தண்ணீரையும் குறிக்கும். இந்த ஆசனத்தை இரு கைகளாலும் செய்தால், அக்குபிரஷர் ஏற்படுகிறது. இது உடலின் ஐந்து உறுப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை பராமரிக்கிறது.

ஹக்கினி முத்ராவின் செய்முறை
முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பிறகு கண்களை மூடி இரண்டு கண்களுக்கும் இடையில் கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டு கைகளையும் தொப்புளுக்கு அருகில் கொண்டு வாருங்கள். இப்போது உங்கள் இரு கைகளின் விரல் நுனிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
நான்கு விரல்களும் முன்னோக்கி இருக்க வேண்டும் மற்றும் கட்டைவிரல் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
விரல் நுனியில் லேசான அழுத்தத்தைப் பயன்படுத்துங்கள். அடுத்து, ஆழமான மற்றும் நீண்ட மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆசனத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். இதை காலையில் சூரிய உதயத்திற்குப் பிறகும், இரவு தூங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பும் செய்ய வேண்டும்.
ஹக்கினி முத்ராவின் நன்மைகள்
* நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
* ரத்த ஓட்டம் மேம்படுகிறது, இதன் காரணமாக ஆக்ஸிஜன் மூளையை அடைகிறது.
* நினைவாற்றல், செறிவு மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது.
* மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் குறையும்.
* இந்த முத்ரா உடலின் தோஷங்களை (வட, பித்த மற்றும் கபா) சமநிலைப்படுத்துகிறது.
* இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் வராது.
- ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
- மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத இடமே இருக்காது. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் சில நன்மையான விளைவுகள் இருப்பினும், பல்வேறு தீய விளைவுகளும் நிறைந்துள்ளது. இதனைப் பலரும் அறிந்தும் ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மக்கள் ஸ்மார்ட்போன் திரையை மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம். ஆய்வு ஒன்றில் வெளியான அறிக்கையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சிந்திக்கும் திறன் பாதிப்பு
ஒருவர் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இது அவர்களின் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால், மனச்சோர்வு ஏற்படுவதுடன், சிந்திக்கும் திறன் பாதிப்படையலாம். நீண்ட நேரம் மொபைல் பயன்பாட்டில் இருப்பது அவர்களுக்கு மொபைல் மீதான நாட்டத்தையே அதிகரிக்கிறது. இது மற்ற முக்கியமான விஷயங்களில் செலுத்தப்படும் ஈடுபாட்டைக் குறைக்கிறது.

உணர்ச்சி ரீதியான நிலையற்றத் தன்மை
ஸ்மார்ட்போன் பயன்பாடு உணர்ச்சி ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக சமூக ஊடகங்களின் தாக்கம் அவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்கு உணர்ச்சி ரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மனச்சோர்வு
சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பது பயனற்ற தன்மையை அதிகரிக்கலாம். இது இறுதியில் மன அழுத்தத்தைத் தருவதாக அமைகிறது. சமூக ஊடங்களை நீண்ட நேரம் உற்று நோக்குவது மனச் சோர்வை அதிகரிப்பதுடன் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
குறைவான செயல்திறன்
நீண்ட நேரமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது அவர்களின் செயல்திறனைக் குறைக்கிறது. இது மோசமான செயல்திறனை ஏற்படுத்துகிறது. இதனால் வேலையில் ஈடுபாடு குறைவதுடன், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய செயல்கள் செய்ய முடியாமல் போகலாம். இந்த தாமதமான செயல்பாட்டு மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநலத்தைப் பாதிக்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

உறவில் சிக்கல்கள்
தொலைபேசி அடிமையாகி விடுவது குடும்பம் அல்லது பார்ட்னர்களுடனான உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மற்றவர்கள் முன்னிலையில் தொலைபேசியைத் தொடர்ந்து பயன்படுத்துவது, அவர்களைப் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கலாம். இது உறவுகளுக்குள் பிரச்சனை மற்றும் மோதலை ஏற்படுத்தலாம். அதே சமயம், துணையுடன் நேரடியாக உரையாடுவதைக் காட்டிலும், செல்போன் மூலமாக தொடர்பு கொள்வது உறவின் நெருக்கத்தைக் குறைக்கிறது.
- உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
- எந்த வேலையும் செய்ய முடியாத சோர்களை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்து, பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகலாம்.

செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித தூக்க கலக்கத்திலேயே இருக்கும் உணர்வுடன் காணப்படுகிறார்கள்.
நீண்ட கால தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் செல்போன் மூலம் தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், ஆபாச படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே ஆபாசங்களை நோக்கி நகரும் அபாயம் இருக்கிறது. இது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதுதவிர, தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தி இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள 74 ஆயிரம் பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தரும்.
- மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மது அருந்துபவர்கள் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 9.5 லிட்டர் ஆல்கஹால் உட்கொள்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிலர் அவ்வப்போது குடிப்பவர்கள். 28 நாட்களுக்கு மது அருந்தாமல் இருப்பது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது பழக்கவழக்கங்களால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நமது பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. சில மாற்றங்கள் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. சில மாற்றங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை தரும்.
பொதுவாக, மது குடித்து உறங்கும் நிலையில் மூளையின் இயக்கம் சரியான நிலையில் இல்லாமல் போவதால் ஆழ்ந்த தூக்கம் இருக்காது.
மதுவை கைவிடும் போது மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
காலையில் எழும் போது ஹேங்க் ஓவர் தலைவலி பாதிப்புகள் நீங்கும். மது உடலில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சிக் கொள்வதால் வாய் நாக்கு வறண்டு விடும். ஆனால், மது குடிக்காதபோது உடலில் நீர் வினியோகம் சரியாக இருக்கும். மது மூளையில் உள்ள மெல்லிய நரம்புகளை பலவீனம் அடையச் செய்துவிடும்.
மூளையின் நினைவாற்றலை கையாளும் பகுதியான "ஹிப்போகேம்பஸ்" என்ற பகுதியை செயல்பட விடாமல் மது தடுக்கிறது. இதனால், நினைவாற்றல் குறையும். எளிதில் எந்த விஷயங்களும் உடனே நினைவுக்கு வராது. ஆனால், மதுவை நிறுத்தியவுடன் மூளை நரம்புகள் பலம் பெறுவதால் நினைவாற்றல் மேம்பட ஆரம்பிக்கும்.
மது உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைப்பதால் உண்ணும் உணவின் சத்துக்கள் உடலில் உட்கிரகிக்கப்படாமல் போகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.
மதுவை நிறுத்தி விடும்போது வயிறு நன்றாக இருக்கும். செரிமான மண்டலம் பலம் பெற்று குடல் உறிஞ்சிகள் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை ரத்தத்தில் சேமிப்பதால் உடல் பலம் பெறும்.
மதுப்பழக்கம் உடலின் தோல் பகுதியில் உள்ள நீர்ச்சத்தை இழக்க செய்வதால் மங்கலான அல்லது வீங்கிய சருமம் மற்றும் தோல் அழற்சியை ஏற்படுத்தும். மதுவை கைவிடும் போது தோலுக்கு போதியளவு நீர்ச்சத்து கிடைத்து சரும ஆரோக்கியம் மேம்படும்.
மதுப்பழக்கம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான முக்கிய காரணமாக அறியப்படுகிறது. மதுவை கைவிடும்போது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
- நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும்.
- தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும்.
நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். என்ன நடந்தாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படக்கூடியது.
தூக்கக் கோளாறுகள் இயல்பான உடல், மன அழுத்தம் உணர்ச்சி செயல்பாடுகளில் தலையிடும் அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பாலிசோம்னோ கிராபி மற்றும் ஆக்டிகிராபி ஆகிய சோதனை மூலம் தூக்கக் கோளாறுகளை கண்டறிகின்றனர்.
இந்த சோதனைகள் கடினமானது. இவற்றின் மூலம் ஒருவருக்கு எந்த விதமான தூக்க குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம்.
தூக்கமின்மை குறித்து ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் ஐஐஐடி-எச் ஆராய்ச்சியாளர்கள் நவீன முக கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முக கவசம் வழக்கமான முக கவசம் போல் தோற்றமளிக்கிறது. இதில் பல்வேறு விதமான மின்முனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முக கவசத்தை ஒருவருக்கு அணிய செய்தால் அவருக்கு எந்த விதமான தூக்கமின்மை உள்ளது என்பதை 80 சதவீதத்திற்கு மேல் துல்லியமாக கண்டறிய முடியும். இது கண் மற்றும் கால் இயக்கம் ஆக்சிஜன் அளவு இதயத்துடிப்பு சுவாச முறை மற்றும் மூளை போன்ற பல்வேறு உடல் உறுப்புகளை கண்காணிக்க கூடியது.

இந்த முகமூடி மூலம் வெவ்வேறு விதமான தூக்க குறைபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் சிகிச்சை அளித்து தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும்.

நமக்கு ஏன் தூக்கம் வர மாட்டேங்குது என நினைப்பவர்கள் நிம்மதியாக தூங்க இந்த முக கவச சோதனையை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.