search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonstration to catch the leopard சிறுத்தை புலியை"

    • பரமத்திவேலூர் அருகே சூரியாம்பாளையம் பகுதி யில் உள்ள வீடுகளில் கட்டி யிருந்த கன்று குட்டிகள், நாய், மயில்கள், ஆடுகள் உள்ளிட்டவற்றை அந்த பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலி தாக்கி கொன்றது.
    • கால்நடை களை தொடர்ந்து தாக்கி கொன்று வரும் சிறுத்தை புலியை பிடிக்கக்கோரி, பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,

    கபிலர்மலை அருகே உள்ள

    இருக்கூர், செஞ்சுடை யாம்பாளையம் மற்றும் சுண்டப்பனை பகுதிகள், பரமத்திவேலூர் அருகே சூரியாம்பாளையம் பகுதி யில் உள்ள வீடுகளில் கட்டி யிருந்த கன்று குட்டிகள், நாய், மயில்கள், ஆடுகள் உள்ளிட்டவற்றை அந்த பகு

    தியில் சுற்றித் திரியும் சிறுத்தை

    புலி தாக்கி கொன்றது.

    இதையடுத்து, கால்நடை களை தொடர்ந்து தாக்கி கொன்று வரும் சிறுத்தை புலியை பிடிக்கக்கோரி, பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், மாவட்டச் செயலாளர் சுஜாதா செல்வி, பா.ஜ.க மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட துணை தலைவர் வடிவேல், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் அரிமா காந்தி, மாவட்ட துணை செயலாளர் பழனியப்பன், பரமத்தி ஒன்றிய தலைவர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×