என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "வடசென்னை அனல் மின்நிலையம்"
- உய்ய அனல் மின் திட்டம் நிலை 3ல் தற்போது சோதனை இயக்கத்திற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
- டிசம்பர் மாத இறுதிக்குள் முழுமையான மின் உற்பத்தியை தொடங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சென்னை:
வட சென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை -3 ல் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 07.03.2024 அன்று. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்த (1X800 மெகா வாட்) வட சென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை 3ல் தற்போது சோதனை இயக்கத்திற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி பொருளாதாரரீதியான மின் உற்பத்தி பணிகளை துரிதமாக முடித்து, வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் முழுமையான மின் உற்பத்தியை தொடங்க உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கநத்தகுமார். இயக்குனர் (திட்டம்) கருக்குவேல் ராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
- கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
- அனல் மின் நிலையத்தின் 2- வது நிலையில் உள்ள 1-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 விதம் 1,200 மெகாவாட் என மொத்தம் தினமும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் 2- வது நிலையில் உள்ள 1-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.