என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valentine’s Day"

    • நாளை காதலர் தினம் என்பதால் மதுரை மலர் சந்தையில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்தன.
    • ஒரு பாக்கெட் ரூ.200-க்கு விற்பனையாகிறது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூ கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவது வழக்கம்.

    நாளை காதலர் தினம் என்பதால் ரோஜா மலர்கள் அதிகளவில் விற்பனையாகும். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தைக்கு ரோஜா மலர்கள் அதிகளவில் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ரோஜா மலர்கள் ஓசூர், கொடைக்கானல், ஊட்டி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் ரோஜா பூக்கள் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரையில் காதலர்கள் எல்லை மீறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி ராஜாஜி பூங்கா, எக்கோ பார்க், அழகர்கோவில் மலை, திருமலை நாயக்கர் மகால் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று முதலே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை ராஜாஜி பூங்காவுக்கு காதலர் தினத்தையொட்டி ஜோடியாக வந்திருந்த சில பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் பலருக்கும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மதுரைக்காரர்களுக்கு ஏற்கனவே காதலர் வாரம் தொடங்கி விட்டது. காதலர் தினம் என்றால் பலருக்கும் ரோஜா பூக்கள் தான் நினைவுக்கு வரும். அது தவறு. ப்ரவரி 7-ந்தேதி ரோஜா தினம் ஆகும். அன்றுதான் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.

    பிப்ரவரி 8-ந்தேதி முன்மொழிவு நாள். அன்றுதான் நேசிப்பவர்க ளிடம் காதலை வெளிப் படுத்த வேண்டும். பிப்ரவரி 9-ம் தேதி சாக்லேட் தினம். அன்றைய நாளில் காதலர்கள் விரும்பத்தகாத மற்றும் மோசமான நிகழ்வு களை மறந்து, சாக்லேட் பகிர்ந்து காதலை பரிமாறிக் கொள்வார்கள்.

    பிப்ரவரி 10-ந்தேதி டெடி டே அன்று அழகான பொம்மையை வழங்கியுள்ளோம். அது எங்களின் மன அழுத்தத்தை குறைக்க, முகத்தில் புன்ன கையை வரவழைக்க உதவியாக இருக்கும். பிப்ரவரி 11-ந்தேதி வாக்குறுதி தினம். அன்றைய நாளில் காதலர்கள் உறவை ஆழப்படுத்திக் கொள்வோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் உறுதியேற்றுக் கொண் டோம்.

    பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள். அன்றைய நாளில் அன்புக்குரியவர்களை அரவணைப்பதன் மூலம் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளோம். அது நிச்சயமற்ற தன்மை அல்லது எதிர்காலம் பற்றிய கவலையை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும்.

    • சாப்பிடும் போது குடும்ப விஷயங்களை மட்டும் விவாதிக்க வேண்டும்.
    • தனது தாயிடம் தனது நடத்தை குறித்து புகார் செய்வதை நிறுத்த வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுபம் மற்றும் அனையா தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் இருவரும் நேற்று காதல் தினத்தில் பத்திரத்தில் வினோத ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

    அந்த ஒப்பந்தத்தில் மனைவி, கணவர் பின்பற்ற வேண்டியவை குறித்து தெரிவித்துள்ளதாவது சாப்பிடும் போது குடும்ப விஷயங்களை மட்டும் விவாதிக்க வேண்டும்.

    வர்த்தகம் பற்றி பேசக்கூடாது. இனி என்னை பியூட்டி காயின், கிரிப்டோ பை என அழைப்பதை நிறுத்த வேண்டும். படுக்கை அறையில் பங்குச்சந்தை லாபம் நஷ்டம் பற்றி பேசக்கூடாது.

    இரவு 9 மணிக்கு பிறகு வர்த்தகம் தொடர்பான செயலி மற்றும் வீடியோக்களை பார்க்க கூடாது. இவ்வாறு மனைவி கூறி இருந்தார்.

    அதேபோல் கணவரும் மனைவிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருந்தார். அதில் தனது தாயிடம் தனது நடத்தை குறித்து புகார் செய்வதை நிறுத்த வேண்டும். வாக்குவாதத்தின் போது முன்னாள் காதலி குறித்து பேசக்கூடாது.

    விலை உயர்ந்த தோல் மற்றும் பராமரிப்பு பொருட்களை வாங்கக்கூடாது. இரவு நேரங்களில் ஆப் மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்ய கூடாது இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த ஒப்பந்தங்களை மீறினால் 3 மாதங்களுக்கு துணி துவைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து சமையல் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தனர்.

    இவர்களின் வேடிக்கையான ஒப்பந்தம் போட்ட பத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×