என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பர் வயர்"

    • கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது.

    நெல்லை:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    அந்நிறுவன வளாகத்தில் ஏராளமான காப்பர் வயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் வயர்களை திருடிய மர்மநபர்களை தேடி வரு கின்றனர்.

    • சின்னராசு ,சக்கரவர்த்தி ஆகியோர் விக்ரம் என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவிகொளப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 29). அதே ஊரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தியும் அதே ஊரில் உள்ள பெருமாள் நாயக்கர் வீதி யைச் சேர்ந்த விக்ரம் (30) என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர். அப்போது கையும் களவுமாக சின்னரா சாவை பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் சின்னராசுவை கைது செய்தனர். தப்பிவிட்ட சக்கரவர்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×