என் மலர்
நீங்கள் தேடியது "காதலர் தினம் கொண்டாட்டம்"
- உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
நெல்லை:
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட காதல் தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். கேக்கில் ஆதலால் காதல் செய்வீர் என எழுதப்பட்டிருந்தது. இதன் பின்னர் அவர்கள் எடுத்து வந்த ஜோடி புறாக்களை வானில் பறக்க விட்டும், இனிப்புகள் வழங்கியும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் சமத்துவம் பேசும் காதலர் தினத்தை வரவேற்போம் என கோஷம் எழுப்பினர்.
காதலர் தினத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் காதலர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புறாக்களை பறக்க விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் நாளாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உங்கள் காதலிக்கு அவர் எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் வகையில் டெடி பியர் பொம்மையை வாங்கி கொடுக்கலாம்.
காதலர் தினத்தையொட்டி எந்தெந்த நாட்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காதலர் தின அட்டவணை வெளியாகியுள்ளது. வருகிற 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை காதலர் தினத்தையொட்டி எந்தெந்த நாட்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யமான அந்த தினங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பிப்-7 ரோஜா தினம்
வருகிற 7-ந்தேதி ரோஜா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தாங்கள் விரும்பும் பெண்களுக்கு எப்போதுமே ரோஜா பூக்களை கொடுத்து மகிழும் வாலிபர்கள் இந்த நாளில் ரோஜாப்பூக்கள் மற்றும் பூங்கொத்தை கொடுத்து காதலர் தினத்தை வரவேற்க உள்ளனர்.
பிப்-8 காதலை தெரிவிக்கும் நாள்
மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் நாளாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் ரோஜாப்பூவை கொடுத்து மகிழ்வித்த சூட்டோடு சூடாக மனதில் உள்ளதை எந்தவித தயக்கமுமின்றி 'ஐ லவ் யூ' என விரும்பிய பெண்களிடம் காதலை வெளிப்படுத்தும் நாளாக இந்த இனிய நாள் பார்க்கப்படுகிறது.
பிப்-9 சாக்லேட் தினம்
தாங்கள் விரும்பும் பெண்களுக்கு வாலிபர்கள் சாக்லேட்டுகளை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிப்பது வழக்கம். எந்த இனிப்புக்கும் இல்லாத தனிச்சுவை சாக்லேட்டுக்கு இருப்பதால் இந்த நாளில் சாக்லெட்டுகளை காதலிகளுக்கு ஊட்டி விட உகந்த நாள் என்கிற தகவலும் பரவி வருகிறது.
பிப்-10 டெடி தினம்
காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த பல்வேறு வழிகளை கையாலும் நிலையில் இந்த நாள் டெடி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உங்கள் காதலிக்கு அவர் எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் வகையில் டெடி பியர் பொம்மையை வாங்கி கொடுக்கலாம்.
பிப்-11 வாக்குறுதி தினம்
எப்போதும் உன்னை விட்டு விலகவே மாட்டேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அளிப்பதற்கு உகந்த நாளாக இந்த நாளை பயன்படுத்த காதலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிப்-12 கட்டியணைக்கும் தினம்
கட்டி அணைப்பது என்பது காதலில் தவிர்க்கவே முடியாததாகிவிட்ட இந்த காலகட்டத்தில் கட்டி அனைத்து அன்பை வெளிப்படுத்தும் நாளாக காதலர்கள் இந்த நாளை தேர்வு செய்திருக்கிறார்கள்.
பிப்-13 முத்த தினம்
காதலின் மொத்த இன்பமுமே முத்தத்தில் தான் அடங்கி உள்ளதால் இந்த நாளை முத்தமழை பொழியும் நாளாக தேர்வு செய்திருக்கிறார்கள்.
பிப்-14 காதலர் தினம்

உச்சக்கட்ட கொண்டாட்ட நாளாக உள்ள இந்த நாள் ஊர் சுற்றுவதற்கு உகந்த நாளாகும் என்பதால் இந்த நாளில் வெளியில் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பிப்-15 கன்னத்தில் அறையும் தினம்
காதலர் தினத்தில் ஏதாவது சண்டை ஏற்பட்டு அதற்காக காதலனின் கன்னத்தில் அறையும் நாளாக இந்த நாளை தேர்வு செய்துள்ளனர்.
பிப்-16 உதைக்கும் தினம்
இன்னும் ஒருபடி மேலே சென்று காதலனை உதைக்கும் தினமாக இந்த நாளை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேவையில்லை என்றால் எட்டி உதைத்து வெளியேற்றும் நாளாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.
பிப்-17 வாசனை தினம்
சண்டை முடிந்த புத்துணர்ச்சி பெறும் வகையில் வாசனை திரவியங்களை காதலிக்கு வாங்கி கொடுத்து குஷிப்படுத்தும் நாளாக இதனை மாற்றிக் கொள்ளலாம்.
பிப்-18 காதல் தினம்
பிப்-14 காதலர் தினமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில் பிப்-18 ஐ காதல் நாளாக கடைபிடிக்கும் தகவலும் வெளியாகி உள்ளது. காதலர் தினத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளும் நாளாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.
பிப்-19 மன்னிப்பு தினம்
காதலர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசி தீர்த்து தவறு செய்தவர்கள் மன்னிப்பு கேட்கும் தினமாக இந்த நாளை காதலர்கள் தேர்வு செய்துள்ளனர்.
பிப்-20 மாயமாகும் தினம்
காதலர்கள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு புரிந்து சென்று மாயமாகும் தினமாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.
பிப்-21 பிரியும் தினம்
காதலர்களுக்கு இடையேயான சண்டை முற்றி முழுமையாக பிரியும் தினமாக இந்த நாள் உள்ளது. பிரிவோம்... சந்திப்போம் என்பதுதானே எப்போதும் காதலின் மொழியாக உள்ளது.
- இனிமேல் ராணுவத்தில் உள்ளவர்கள் திருமணமே செய்யக் கூடாது என மன்னர் உத்தரவிட்டார்.
- அடித்தே கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.
காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். இந்த நாளை 'வேலன்டைன்ஸ் டே' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றோம். இந்த பெயருக்கு பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார், அவரது உயிர்த் தியாகம் இருக்கிறது. அவர் யார்?, அவரது தியாகம் எப்படிப்பட்டது என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
ரோம் நகரை இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய ராணுவ வீரர்கள் பலர் திருமணம் செய்ய தொடங்கியதால் குழந்தைகள் மீதும், மனைவி மீதும் அதிக அன்பு செலுத்தி வந்தனர். இதனால் ராணுவப் பணியில் அவர்களது கவனம் குறையத் தொடங்கியது.

இதை அறிந்த மன்னர், இனிமேல் ராணுவத்தில் உள்ளவர்கள் திருமணமே செய்யக் கூடாது என உத்தரவிட்டார். இதனால் பலரும் அச்சப்பட்டனர். அந்த காலத்தில் தான் வேலன்டைன் எனும் பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவர் மன்னருக்கு தெரியாமல் காதலர்கள் பலருக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இந்த செய்தியை அறிந்த மன்னர் அவரை சிறையில் அடைத்து மரணதண்டனை கொடுத்தார். அடித்தே கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.
ஆனால் அதற்கு பதிலாக அவரது தலையை வெட்டி கொலை செய்தனர். அவர் கொலை செய்யப்பட்ட நாள்தான் பிப்ரவரி 14. அதனால்தான் இந்த நாள் வேலன்டைன்ஸ் டே என அழைக்கப்பட்டது. இவ்வாறு மகிழ்ச்சியாய் கொண்டாடும் காதலர் தினத்துக்குள் ஒரு மனிதரின் உயிர்த் தியாகம் மறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- நட்பு தினம் பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது
- சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது.
உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக காதலர் தினம் மருவி நிற்கிறது. அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் எவ்வாறு காதலர் தினம் வித்தியாசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
பின்லாந்து:
இங்கு வழக்கமான காதலர் தின மரபுகளுக்குப் பதிலாக, " நட்பு தினம் " பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களை வாழ்த்தியும் பரிசளித்தும் இந்த தினத்தைப் பின்லாந்து மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஜப்பான்:
ஜப்பானில், காதலர் தினத்தன்று பெண்கள் தங்கள் துணைக்கு சாக்லேட்டுகள், பரிசுகள் வழங்கி மகிழ்வார்கள். இந்த பாரம்பரியம் அதோடு முடிவடையவில்லை. சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, மார்ச் 14 அன்று, ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது. அப்போது பரிசுகளைப் பெற்ற ஆண்கள் தங்கள் காதலிக்குப் பரிசுகளை வழங்குவார்கள்.
டென்மார்க் மற்றும் நார்வே:
டென்மார்க் மற்றும் நார்வேயில், காதலர் தினம் என்பது ஜோடிகளுக்கு மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் தங்களுக்குள் கவிதை அட்டைகளைப் பரிமாறிக்கொள்வார்கள். கவிதை அட்டைகளை நேசிப்பவர்களுக்கு தங்களின் பெயரை எழுதாமல் அனுப்புவார்கள். யார் அனுப்பியது என்று அவர் கண்டுபிடித்தால் அவர் ஈஸ்டர் முட்டையை வெல்வார். இல்லையெனில் ஈஸ்டர் முட்டையை அவர் அனுப்பியவருக்குத் தர வேண்டும்.
இங்கிலாந்து:
இங்கிலாந்தில், காதலர் தினம் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகள் மிட்டாய், பழம் அல்லது பணத்திற்கு ஈடாக பாட்டு பாடும் ஒரு அழகான பாரம்பரியம் உள்ளது. சிலர் திராட்சை, பிளம்ஸ் அல்லது காரவே விதைகளால் சுடப்பட்ட காதலர் பன்கள் அல்லது "பிளம் ஷட்டில்ஸ்" பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஜெர்மனி:
காதல் மற்றும் காமம் இரண்டையும் குறிக்கும் வகையில், பன்றி சிலைகளையும், பொம்மைகளையும் கொடுத்து ஜெர்மானியர்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்
பிலிப்பைன்ஸ்:
காதலர் தினத்தில் அதிக திருமணங்கள் நடக்கும் இடம் பிலிப்பைன்ஸ். நூற்றுக்கணக்கான தம்பதிகள் வாழ்வில் ஒன்றிணைகிறார்கள். இதற்காக அரசாங்கம் பெரிய அளவிலான விழாக்களை நடத்துகிறது.
தென்னாப்பிரிக்கா:
ரோமானிய பண்டிகையான லூபர்காலியாவை கௌரவிக்கும் விதமாக பிப்ரவரி 15 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் அதுவரை தாங்கள் ரகசியமாக வைத்திருந்த காதலை வெளிப்படுத்துவார்கள்.
தான் காதலிக்கும் ஆடவனின் பெயரைத் துணிச்சலுடன் தங்கள் சட்டைகளில் இடம்பெறச் செய்து காதலனுக்கும், உறவினருக்கும் ஊராருக்கும் தனது காதலை அறியச் செய்வார்கள். பூக்கள் அல்லது சிறிய பரிசுகள் மூலமும் காதலர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவர்.
தைவான்:
தைவானில், காதலை வெளிப்படுத்துவதில் பூக்கள் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆண்கள் காதலர் தினத்திலும், மீண்டும் ஜூலை 7 ஆம் தேதியும் காதலிக்கு பெரிய பூங்கொத்துகளை வழங்குகிறார்கள். சரியாக 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை நீங்கள் பெற்றால், அது யாரோ ஒருவர் காதலை உங்களுக்கு சொல்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
தென் கொரியா:
தென் கொரியாவில், காதலர் தினம் என்பது ஒரு மாத கால கொண்டாட்டத்தின் தொடக்கமாகும். பிப்ரவரி 14 அன்று, தம்பதிகள் சாக்லேட்டுகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள். பின்னர், மார்ச் 14 அன்று, ஜப்பானின் பாரம்பரியத்தைப் போலவே, வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இறுதியாக, ஏப்ரல் 14 அன்று சிங்கிள்ஸ்களுக்கான கருப்பு தினத்துடன் கொண்டாட்டங்கள் முடிவடைகிறது.
பிரேசில்:
பிரேசிலில், திருமணத்தின் ரட்சகனான துறவி புனித அந்தோணியார் விழாவிற்கு முந்தைய நாளான ஜூன் 12 அன்று காதலர் தினம், தியா டோஸ் நமோராடோஸ் (காதலர்கள் தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி மாத காதலர் தினம் கார்னிவலுடன் வருவதால் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அமெரிக்காவைப் போலவே, பிரேசிலியர்களும் காதலர் தினத்தன்று இரவு உணவிற்கு வெளியே செல்வது, பரிசுகளை பரிமாறிக்கொள்வது, தங்கள் துணையுடன் இரவில் டேட்டிங் செய்வது உள்ளிட்டவை மூலம் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள்.