search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் பவார்"

    • அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளார்
    • எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார்.

    மகாராட்டிர தேர்தல் நெருங்குவதை ஒட்டி துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் தங்கள் பக்கம் வந்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது.

    குறிப்பாக மக்களவைத் தேர்தலில் சரத் பவார் அணி சார்பில் இந்திய கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று அஜித் பவார் கூறியது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதை வெளிப்படையாக காட்டியது.

    மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர பாஜக கூட்டணி பின் தங்கியதற்கு அஜித் பவார் அணி தான் காரணம் என்ற சலசலப்பும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்த அஜித் பவார் மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தை உடைத்தது பெரிய தவறு என்று அஜித் பவார் பொதுவெளியில் மீண்டும் வருத்தப்பட்டு உள்ளார்.

    அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார். இந்நிலையில் கட்சிரோலி நகரில் நடந்த ஜனசம்மான் பேரணியில் கலந்துகொண்ட அஜித் பவார், ஒரு மகளை அவரது தந்தையை விட யாரும் அதிகமாக நேசிக்க மாட்டார்கள், உங்களை [பாக்கியஸ்ரீ] ஜில்லா பிரெசிடெண்டாக ஆக்கினார் உங்கள் தந்தை.

    ஆனால் நீங்கள் இப்போது அவருடன் சண்டை போடுவது சரிதானா? உங்கள் தந்தைக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவரை விட்டு செல்வது குடும்பத்தை உடைப்பது போன்றது, தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. நானும் அதை அனுபவித்திருக்கிறேன், எனது தவறை நான் ஏற்றுகொண்டடேன் என்று தெரிவித்துள்ளார்.

    சரத் பவாரை விட்டு வெளியேறியதைத் தவறு என்று அஜித் பாவர் கூறியுள்ளது பாஜக மேலிடத்தில் கொந்தளிப்பை எப்ராடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 

    • மகாராஷ்டிராவில் முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதாரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.
    • சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கினர்.

    மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு ஹாஜி அஸ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.

    அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில் இறைச்சித் துண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. அது மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டிய சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "2 நாட்களுக்கு முன்பு இகத்புரி பகுதியில் ரயில் பயணத்தின் போது முதியவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். இத்தகைய சமூக விரோதிகளுக்கு நமது அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

    • அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.
    • தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் சொந்த கூட்டணி அரசை எதிர்த்தே அஜித் பவார் தேசியவாத காங்கிரசார் போராட்டம் நடத்தியது அந்த விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இதற்கெல்லாம் மேலாக, மஹாயுதி கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரசுடன் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா காட்சியைச் சேர்ந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ள கருத்து கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    தாராஷிவ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய தனாஜி சாவந்த், நான் அசல் சிவசேனா காரன், எனது மாணவப் பருவத்தில் இருந்தே தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசை எனக்கு பிடித்ததில்லை. இதுதான் உண்மை. அதனால் இப்போது சட்டமன்றத்தில் அஜித் பவாருடனும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுடன் அருகருகே அமருவதை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்து அஜித் பவார் அணியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறுய்த்து பேசிய அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் உமேஷ் பாட்டீல் கூறுகையில், எங்களை அவமதிக்கும் வகையில் தானாஜி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருப்பதை விட, மஹாயுதி கூட்டணியை விட்டு வெளியேறுவதே சிறந்தது. தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

     

    இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அஜித் பவார், நான் மக்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன், விமர்சனங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. எனக்கு எதிராக பேசுபவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சுயமரியாதையை இழந்து, இன்னும் அந்த கூட்டணியில் அஜித் பவார் நீடிக்க வேண்டுமா?' என சரத் பவார் அணி தேசியவாத காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    • மாநில அரசு மக்களவை தேர்தலின்போது அன்பான சகோதரியை நினைவில் கொள்ளவில்லை.
    • மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலின்போது அன்பு நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.

    பாராமதி மக்களவை தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து அஜித் பவார் தனது மனைவியை நிறுத்தினார். இதில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றார். ஒரு சில தினங்களுக்கு முன் சகோதரி சுப்ரியா சுலேவுக்கு எதிராக மனைவியை நிறுத்தியது தவறு. அதற்கான வருந்துகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மாநில தேர்தலின்போது தங்கை மீதான அன்பு நிரம்பி வழிகிறது என சுப்ரியால சுலே, அஜித் பவாரை கிண்டல் அடித்துள்ளார்.

    இது தொடர்பாக மக்களவை எம்.பி.யான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    மாநில அரசு மக்களவை தேர்தலின்போது அன்பான சகோதரியை நினைவில் கொள்ளவில்லை. மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலின்போது அன்பு நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.

    சொந்தம் மற்றும் தொழில் ஆகியவற்றை சகோதரரால் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. ஒன்று உறவுக்குள் (சொந்தம்) பணத்தை கொண்டு வரக்கூடாது, தொழிலில் உறவை கொண்டு வரக்கூடாது. எனினும், எங்களுடைய சகோதரர் இதை புரிந்து கொள்வதில் தோல்வியடைந்துள்ளார். இது எங்களுக்கு மிகவும் வலியை கொடுக்கிறது.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    • நான் ஏழு அல்லது எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். எனக்கு தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை.
    • எனது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து பாராளுமன்ற குழு முடிவு செய்யும்.

    மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவார், ஏழு அல்லது எட்டு முறை வெற்றி பெற்றுள்ளேன். இதனால் தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவார் பாராமதி சட்டமன்ற தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அவரது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பாராமதி தொகுதியில் மக்கள் உங்கள் மகனை நிறுத்த வற்புறுத்தினால் அவர் நிறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு அஜித் பவார் பதில் அளித்து கூறியதாவது:-

    இது ஜனநாயகம். நான் ஏழு அல்லது எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். எனக்கு தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை. மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், இது தொடர்பாக பாராளுமன்ற குழுவில் விவாதம் நடத்துவோம்.

    பாராளுமன்ற குழு மற்றும் மக்கள் ஜெய் பாராமதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பினால் தேசியவாத காங்கிரஸ் அவரை நிறுத்துவதற்கு தயார்.

    எனக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. லட்கி பஹின் (Ladki Bahin) திட்டம் மூலம் பெண்களுக்கு முதல் தவணையாக 1500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 35 லட்சம் பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அஜித் பவார் தெரிவித்தார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தட்காரே, "தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அஜித் பவார் சொல்லவில்லை. அவர் சில திட்டம் வைத்திருப்பார். முடிந்தவரை அதிகமான இடங்களை பிடிக்க விரும்புகிறோம்" என்றார்.

    அஜித் பவாரின் மூத்த மகன் பர்த் பவார் மாவல் மக்களவை தொகுதியிலா் 2019-ம் ஆண்டு போட்டியிட்டு மிகப்பெரிய வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'பாராளுமன்ற குழு முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன்'
    • 'கூட்டணி கட்சியினர் சரத் பவாரை விமர்சிக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்'

    மகாராஷ்டிர அரசியலும் மகா கூட்டணிகளும் 

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. மாராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு பிரச்சனை , அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை என மொத்த அரசியல் சூழல் குழப்பத்தில் உள்ளது.

    சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜக பக்கம் சென்ற அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் அணி பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதும், அஜித் பவார் ஆதரவர்கள் சிலர் கொத்தாக மீண்டும் சரத் பவாரிடம் சென்றதே அதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகியவை காங்கிரசின் இந்தியா கூட்டணியோடு இணைந்து மகா விகாஸ் கூட்டணியை உருவாக்கி களமாடி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 31 இடங்களை வென்று பாஜக கூட்டணியின் நம்பிக்கையைச் சிதறடித்தது.

    ஒரே கட்சிகளை சேர்ந்த இருவேறு அணிகள் எதிரெதிர் கூட்டணியில் உள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் தேர்தலிலும் பிரதிபலிக்கவே செய்யும். மேலும் எப்போது யார் எந்த அணிக்கு தாவுவார்கள் என்ற நிச்சயத்தன்மை இல்லாத திரிசங்கு நிலைமையே தற்போதைய மகாராஷ்டிர அரசியல் சூழல்.

    அஜித் பவாரும் குடும்ப பாசமும் 

    இதற்கிடையே துணை முதல்வராக உள்ள அஜித் பவார், மக்களவைத் தேர்தலில் சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று கூறியுள்ள கருத்து பாஜக அலுவலகத்தின் பக்கம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே வை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் தனது மனைவி சுனேத்திர பவாரை பாராமதி தொகுதியில் நிறுத்தினார்.

    ஆனால் ஏற்கனவே எம்,பியாக இருந்துவந்த சுப்ரியா சுலே இந்த தேர்தலிலும் வெற்றிபெற்றார். எனவே தோல்வியைத் தழுவிய சுனேத்திர பவாருக்கு ஆறுதல் பரிசாக மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக கூட்டணி வழங்கியது. இதற்கு கட்சி சார்பில் பல எதிர்ப்புகளும் கிளம்பின.

    இதற்கிடையில் தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவார், ''நான் அனைத்து சகோதரிகளையும் நேசிக்கிறேன். அரசியலை வீட்டிற்குள் நுழைய விடக்கூடாது. எனது சகோதரிக்கு எதிராக எனது மனைவியை தேர்தலில் நிறுத்தி தவறு செய்துவிட்டேன். இது நடந்திருக்க கூடாது. ஆனால் பாராளுமன்ற குழு   முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன். ஆனால் அது தவறு என்று இப்போது நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

     

    மேலும் அடுத்த வாரம் ரக்ஷாபந்தனுக்கு உங்களது சகோதரி வீட்டிற்குச் செல்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், `நான் இப்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். நானும், எனது சகோதரியும் ஒரே இடத்தில் இருந்தால் நிச்சயம் அவரை சந்திப்பேன் என்றார். மேலும், சரத் பவார் மூத்த தலைவர். எங்களது குடும்பத் தலைவர். அவர் கூறும் எந்த விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். மேலும் தனது கூட்டணி கட்சியினர் சரத் பவாரை விமர்சிக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது இது குறித்து பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    • நான் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் வெளிப்படையாக செல்வேன்.
    • நான் மாறுவேடத்தில் சென்றதாக கூறப்படும் செய்தி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வருகிறது.

    முன்னதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தன.

    பின்னர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்த பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து பறித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.

    பின்னர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக- ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கூட்டணியில் இணைந்தார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பறித்துக் கொண்டார்.

    தற்போது பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அஜித் பவார் மாறுவேடமிட்டு டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி அமைப்பது குறித்து பேசினார் என்ற செய்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் இந்த செய்தி மீதான நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:-

    நான் மாஸ்க் அணிந்து தொப்பியுடன் விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ததாகவும், என்னுடைய பெயரை மாற்றி பயணம் செய்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    நான் ஜனநாயகத்தில் பணியாற்றி வருபவன். எதையும் மறைத்து அரசியல் செய்கின்ற பழக்கம் எனக்கு இல்லை. இருப்பினும், போலியான கதைகள் மற்றும் தவறான செய்திகள் மூலம் எதிரிகளால் அவதூறுக்கு ஆளாகிறோம்.

    மாறுவேடத்தில் நான் டெல்லிக்கு சென்றதாக கூறப்படும் செய்தி தவறானது. நான் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் வெளிப்படையாக செல்வேன். யாரையும் பற்றி கவலைப்பட வேண்டிய தேவை எனக்கு இல்லை. நான் மாறுவேடத்தில் சென்றதாக கூறப்படும் செய்தி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்.

    அதேவேளையில் இந்த செய்தி தவறானது என கண்டுபிடிக்கப்பட்டால் எந்தவித ஆதாரம் அல்லது உண்மையில்லாமல் குற்றச்சாட்டு உருவாக்கினார்களோ?, அவர்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும்.

    இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவது நான் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எல்லோரும் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், எனவே, அத்தகைய சம்பவம் சாத்தியமற்றது. தற்போது நடப்பது அனைத்தும் தவறு. இந்த அறிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

    தற்போது, மாநிலத்தில் எனக்கு எதிராக அவதூறு பரப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது. பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    • அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் சரத் பவார் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று கூறப்பட்டது
    • சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா காங்கிரசின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த மஹா விகாஸ் அகாதி கூட்டணி மொத்தம் உள்ள 48 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியது.

    அஜித் -பவார் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, பாஜகவின் என்டிஏ கூட்டணியை ஒருங்கிணைத்த மஹாயுதி கூட்டணி 17 இடங்களை மட்டுமே கைபற்றி பின்தங்கியது.

    இதன் விளைவாக ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடந்த சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று பேச்சு அடிபட்டது.

     

    சரத் பவாரும், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.

    சமீபத்தில் நடந்த மேலவைத் தேர்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்காமல் இருக்க ரிஸார்டுகளில்  பாதுகாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

    இந்த நிலையில் பாஜக கூட்டணி தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் அஜித் பவாரிடமிருந்து பிரிந்துள்ள நிலையில் சரத் பவாரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து விரைவில் பலர் சரத் பவாரிடமே திரும்பி வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை
    • மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை

    மகாராஷ்டிரா பள்ளி பாடபுத்தங்களில் மனுதர்ம சாஸ்திரங்கள் சேர்க்கப்படும் என்று தகவலை அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை. மனுதர்ம சாஸ்திரத்திற்கு மகாராஷ்டிராவில் இடமில்லை. மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை. இது அம்பேத்கர், பூலே போன்றோர் பிறந்த பூமி. இவர்களின் முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா" என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவார் இவ்வாறு பேசியிருப்பது பாஜக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
    • எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.

    இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள்  சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்றக் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது
    • கட்சியை உடைத்த அஜித் பவார் அதில் 40 எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.

    இந்த நிலையில்தான் ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் தெரிவித்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் பூதத்தைக் கிளப்பியுள்ளது.

     

    நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ரோகித் பவார் கூறியதாவது, வரும் சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆட்சியில் உள்ள பாஜக - ஷிண்டே கூட்டணி அரசிடம் தங்களது தொகுதிகளுக்கு தேவையான வளர்ச்சி நிதியை கேட்டு வாங்கியதும் அஜித் பவார் பக்கம் இருக்கும் 18 முதல் 19 எம்எல்ஏக்கள் வரை மீண்டும் எங்களிடமே திரும்பி வந்துவிடுவர் என்று தெரிவித்துள்ளார்.

     

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மொத்தமாக 54 இடங்களில் வென்ற நிலையில் கட்சியை உடைத்த அஜித் பவார் அதில் 40 எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பாராமதி மக்களவை தொகுதியில் சர்த் பவார் மகள் சுப்ரியா சுலேயிடம் தோல்வியடைந்தார்.
    • மகாராஷ்டிரா மாநிலங்களில் 2-வது மாநிலங்களை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார், அதிக எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

    தற்போது அஜித் பவார் ஒரு அணியாகவும், சரத் பவார் ஒரு அணியாகவும் திகழ்கின்றனர். சரத் பவார் மகள் சுப்ரியா சுலே பாராமதி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

    மக்களவை தேர்தலில் சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை மீண்டும் அதே தொகுதிளில் நிறுத்தினார். அதேவேளையில் அஜித் பவார் தனது மனைவி சுனேத்ராவை அந்த தொகுதியில் நிறுத்தினார். சுப்ரியா சுலே தனது அண்ணன் மனைவியை எதிர்த்து போட்டியிட வேண்டியிருந்தது.

    இருந்த போதிலும் அண்ணன் மனைவியை வீழ்த்தி 4-வது முறையாக வெற்றி பெற்றார். இதனால் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் ஏமாற்றம் அடைந்தார்.

    இதற்கிடையே அசாம், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில தலா இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்கான இடங்கள் காியாக இருப்பதாக மாநிலங்களவை செயலாளர் அறிவிப்பாணை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் பவார் தனது மனைவியை மாநிலங்களவை எம்.பி.யாக்க முடிவு செய்தார். கட்சியும் ஆதரவு தெரிவிக்க சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.க்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சகான் புஜ்பால் கூறியதாவது:-

    மாநிலங்களவை தேர்தலில் சுனேத்ரா பவார் வேட்புமனு தாக்கல் செய்ய தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நான் கூட இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தேன். ஆனால், நேற்று மாலை (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைவர்கள் சுனேத்ரா பெயரை முடிவு செய்தார்கள்.

    அனைவரும் கட்சி முடிவை ஏற்றுக் கொண்டனர். சில நிர்பந்தங்கள் அங்கே இருந்தன. நான் தனிப்பட்ட நபர் கிடையாது. கட்சி தொண்டர், கட்சி தலைவர்.

    இவ்வாறு சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.

    அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளது.

    ×