என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீதர் வேம்பு"
+2
- கொரோனா காலத்தில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்த போதும், ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனம் குறிப்பிட்ட அளவு வருமானத்தை ஈர்த்தது.
- உலக அளவில் கவனம் பெற்று கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் ஸ்ரீதர் வேம்பு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்பட்டு கோலோச்சி வந்தது.
கிராமப்புறங்களிலும் ஐ.டி. நிறுவனங்களை தொடங்கி வெற்றி பெற முடியும் என சாதித்து காட்டியவர் ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. இவர் உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வந்தாலும் தனது விருப்பமான கிராமப்புறங்களிலும் ஐ.டி. நிறுவனங்களை நடத்த நினைத்து தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை என்ற கிராமத்தில் ஐ.டி. நிறுவனத்தை தொடங்கி பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி மத்திய அரசின் உயர் பதவியான தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினராக ஸ்ரீதர்வேம்புவை நியமனம் செய்தது. கொரோனா காலத்தில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்த போதும், ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனம் குறிப்பிட்ட அளவு வருமானத்தை ஈர்த்தது. உலக அளவில் கவனம் பெற்று கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் ஸ்ரீதர் வேம்பு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி சட்டையில் காணப்படுவார். நவீன கார்களில் செல்ல வசதி இருந்தும் பெரும்பாலும் சைக்கிள்களிலேயே சென்று வருகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீதர்வேம்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் தான் பழைய சாதத்தை சாப்பிட்டு வருவதாவும், அதன் பெருமை குறித்தும் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சில வருடம் காலமாக என் காலை உணவாக பழைய சோறு மாறி உள்ளது. எனது பாரம்பரிய முறையில் இந்த உணவை நான் எடுத்து வருகிறேன். எனக்கு பல காலமாக இரிட்டபிள் பவல் சின்ட்ரோம் எனப்படும் எரிச்சலுடன் கூடிய குடல் பிரச்சினை இருந்தது. இந்த நோய் தற்போது பூரணமாக குணமடைந்து விட்டது. அத்துடன் ஒவ்வாமைகளும் இருந்தன. தற்போது அவைகளும் இல்லாமல் போனது. ஒருவேலை இந்த பதிவு சிலருக்கு உதவும்.
இவ்வாறு அந்த பதிவில் ஸ்ரீதர்வேம்பு குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களிலும் இது பகிரப்பட்டு வருகிறது. இந்நோய் பாதிப்புள்ள பலரும் ஸ்ரீதர்வேம்புக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். சிலர் பழையசோறு, ரெசிபி கேட்டு கருத்து பதிவிடுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக சிலர் அதுகுறித்து வீடியோக்களை இணைத்துள்ளனர்.
- ஆங்கில மோகத்தில் இருந்து விடுபடும்போதுதான் நாம் முன்னேற்றத்தை காணமுடியும் என தெரிவித்துள்ளார்.
- தனது சோஹோ நிறுவனத்தில் சரளமாக ஆங்கிலம் பேசுவதை வைத்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில்லை.
தென்காசி:
அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்மா சர்வா ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கிருந்த வரவேற்பாளர்கள் கருத்து பகிரப்படும் புத்தகத்தில் எழுதினார்.
அப்போது ஆங்கிலம் தெரியாமல் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருந்த உரையை பார்த்து எழுதிய காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் ஏராளமானோர் அவரை சமூக வலைதளங்கள் வாயிலாக கேலி செய்தனர்.
அதனைத்தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, நான் அசாமில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு சென்று ஆங்கிலம் மற்றும் இந்தியை எழுத, படிக்க கற்றுக்கொள்கிறேன்.
மேலும் எனக்கு ஆங்கிலம், இந்தி தெரியாதது பற்றி எவ்வித தயக்கமும் இல்லை என டுவிட் செய்துள்ளார்.
இந்நிலையில் அசாம் முதல்-மந்திரியின் டுவிட்டை குறிப்பிட்டு கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஒரு டுவிட் செய்துள்ளார்.
அதில், ஆங்கிலத்தை சரளமாக பேசவோ, படிக்கவோ, எழுதவோ தெரியாதவர்கள் முட்டாள்கள் என்ற நிலைப்பாடு இந்தியாவில் உள்ள 'எலைட்' பிரிவு மேல்தட்டு சமூகத்தில் உள்ளது. இந்த ஆங்கில மோகத்தில் இருந்து விடுபடும்போதுதான் நாம் முன்னேற்றத்தை காணமுடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சோஹோ நிறுவனத்தில் சரளமாக ஆங்கிலம் பேசுவதை வைத்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில்லை எனவும் அவர் கூறி உள்ளார்.
- போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்.
- எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தற்போதுள்ள நிலைமையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிவிடும் என்று ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், தற்போதைய போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார அடிப்படையில் பார்க்கும் போது, எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும், இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக மத்திய கிழக்கில் எது நடந்தாலும், அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மூன்றாவது அன்னிய செலாவனியும் பாதிக்கப்படும்.
"மின்திறனை பொருத்தவரையில், நமக்கு புதுப்பிக்கத் தக்க மின்திறன் மட்டுமே தேவை. இதற்கான உள்கட்டமைப்புகளை நாம் மேம்படுத்த வேண்டும். நம்மிடம் அதிகளவில் திறமைமிக்கவர்கள் உள்ளனர். நமக்கு தேவையான ஒன்று திறமைமிக்கவர்களை சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவது மட்டும் தான். நமது தனியார் துறைகளில் இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று," என்று அவர் தெரிவித்து உள்ளார்.
"நமது மொத்த வருவாயில் பத்து சதவீதத்தை இந்தியா வழங்குகிறது, மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இது இருமடங்கு அதிகரித்து, முன்னணி சந்தையாக மாறும். நமக்கு மெக்சிக்கோ மிகச்சிறப்பான சந்தையாக உள்ளது. மத்திய கிழக்கில் நாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம். தற்போது இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இதை கணிக்கவே முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்துள்ளது
- இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கல்வி கற்பதற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறித்த விவாதம் இணையத்தில் நடந்துவருகிறது. இதற்கு காரணம் ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்து விட்டதாக பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதே ஆகும்.
தனது பதிவில் அவர், இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 9 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கல்லூரிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர், சோஹோ Zoho நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, இந்தியாவில் நகர்புர ரியல் எஸ்டேட்களின் அதிக விலையினால் கல்வி பயில்வதற்கான கட்டணமும் கட்டுபடியாகாத அளவு உயர்ந்துள்ளது. இந்த ரியல் எஸ்டேட்களில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது .
- மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. மென்பொருள் தொழில் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] உள்ளிட்டவற்றின் வருகையால் மாற்றம் கண்டுவரும் நிலையில் ஜோஹோ நிறுவனத்திலும் இந்த மாற்றம் நிகழ்கிறது.

தொடர்ந்து ஜோஹோ இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ், ஜோஹோ US பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.
ராஜேஷ் கணேசன் ManageEngine பிரிவையும், மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- எனக்கு இப்போது மிகவும் சவாலான புதிய பணி உள்ளது.
- அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமும் எனக்கில்லை.
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து சமீபத்தில் ஸ்ரீதர் வேம்பு விலகினார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50-க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதற்கிடையே, ஸ்ரீதர் வேம்பு அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
நான் அரசியலில் சேருவது பற்றி ஒரு "செய்தி" பரவி வருவதாகக் கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது!
அடுத்த வாரம் ஆஸ்டினில் உள்ள தொழில்துறை ஆய்வாளர்கள் குழுவிற்கு AI பற்றிய எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்தியை வழங்க நான் கடுமையாகத் தயாராகி வருகிறேன். ஆம், நான் அங்கு செல்வேன்.
ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் எனக்கு இப்போது மிகவும் சவாலான புதிய பணி உள்ளது. மேலும் அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமும் எனக்கில்லை.
நான் அரசியலில் சேருவது பற்றி யாருடனும் இதுவரை பேசியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டின் கிராமப்புறங்களை சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் நம்மிடம் உள்ளனர்.
- தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய பாதகமாகும்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு வாதிடுகிறது.
முதலில் மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம் என்று கூறிவிட்டு, அந்தந்த மொழிக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்தி மொழி ஆசிரியர்களை மட்டுமே நியமித்து மாணவர்கள் இந்தி கற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள் என்று விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் மும்பையில் பணிபுரியும் சோஹோ பொறியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்ரீதர் வேம்பு, "இந்தியாவில் சோஹோ வேகமாக வளர்ந்து வருகிறது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களை சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் எங்களிடம் உள்ளனர்.
நமது வணிகத்தின் பெரும்பகுதி டெல்லி, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய பாதகமாகும். இந்தி கற்றுக்கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் நான் இந்தி கற்றுக்கொண்டேன். இப்போது இந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது, தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
- தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
- அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு வாதிடுகிறது.
இந்நிலையில் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நமது வணிகத்தின் பெரும்பகுதி டெல்லி, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய குறை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவைப்பட்டால் உங்கள் ஊழியர்களுக்கு இந்தி கற்றுக் கொடுங்கள்.
உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்?. இதற்கு நேர்மாறாக, அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம். இது பிரச்சினையைத் தீர்க்கும்.
இந்த வகையினரின் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் மற்றவர்களை விட 'அவர்கள் இரு மடங்கு புத்திசாலிகள்' என்று கற்பனை செய்துகொள்வதுதான். அது பரிதாபத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.