search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.32 லட்சத்துக்கு"

    • விவசாயிகள்1,219 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.32 லட்சத்து 16 ஆயிரத்து 218-க்கு பருத்தி விற்பனையானது.

    அம்மாபேட்டை:

    பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புரட்டாசி பட்ட பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திர சேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள்1,219 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் பிடி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 869-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 490-க்கும் விற்பனையானது.

    இதனை பெருந்துறை, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    மொத்தம் ரூ.32 லட்சத்து 16 ஆயிரத்து 218-க்கு பருத்தி விற்பனையானது.

    ×