என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் குண்டு வீசசு"

    • தி.மு.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் எரிந்தது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கரியான் செட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர். தி.மு.க தொண்டரணி நகர துணை அமைப்பாளர். இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம கும்பல் வீட்டின் வெளிப்புறத்தில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பிழம்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த் துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து சங்கர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த இலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×