என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குமக்கள்"

    • கடந்த 7-ந்தேதி சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடக்கம்.
    • வானவேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்திற்கு வந்தடைந்தது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் தேர் பவனி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் பவனி திருவிழா கடந்த 7-ந்தேதி சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் தேர் பவனி திருவிழா சிறப்பு பாடல் திருப்பலியுடன் நடைபெற்றது.

    தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் வைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து தேர் பவனி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கையுடன் புறப்பட்டு பாபநாசம் முக்கிய வீதி வழியாக சென்று பின்னர் அதிகாலை ஆலயத்திற்கு வந்து அடைந்தது.

    நிகழ்ச்சியில் கபிஸ்தலம் பங்கு தந்தை அமல்ராஜ், புனித செபஸ்தியார் ஆலயத்தின் இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர், மற்றும் பாபநாசம் புனித அந்தோணியார் ஆலயத்தின் பங்குமக்களும், நாட்டாமையினரும், கிராமவாசிகளும், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×