search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி திரௌபதி முர்மு"

    • ஜெகநாத ரதயாத்திரையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
    • ஜெகநாத ரதயாத்திரையில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெகநாத ரதயாத்திரை ஒடிசா நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான இந்து பண்டிகையாகும்.  இதில் ஜெகநாத ரதயாத்திரையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில் இரண்டு நாள் பகவான் ஜெகநாதர் ரதயாத்திரை இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜெகநாதரை தரிசனம் செய்வதற்காக பூரி வந்தடைந்தார்.

    அப்போது அவருடன் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




    • ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.

    மதுரை:

    தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார்.

    ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.

    அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்ட உள்ளது. அவருக்கு கோவில் சார்பாக குங்குமம், மீனாட்சி அம்மன் சிலை பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. குடியரசு தலைவர் வருகையையொட்டி 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.

    ×