search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலர்"

    • இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை பயனார்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
    • 11 பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயுள்ளனர்.

    பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை பயனார்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இந்த திட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் திருமணமான 11 பெண்கள் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகையை பெற்றுக் கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடியுள்ளார். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் 2,350 பயனாளர்களுக்கு வீடு காட்டும் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 11 பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயுள்ளனர்.

    இந்த விவகாரத்தை அடுத்து இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணை பணம் கொடுப்பத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    • காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
    • 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). கணிதவியல் பட்டதாரி. இவரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரியா எங்கு சென்றார் என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் பிரியா வேடசந்தூர் ஆத்துமேட்டில் பூக்கடை வைத்திருக்கும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான மனோபாலாஜி (வயது 23) என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலனை மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என நினைத்து மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். வடமதுரை போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    பிரியாவின் குடும்பத்தினர் தங்களுடன் வருமாறு அழைத்தபோதும் தான் கணவருடன் தான் செல்வேன் என அவர் உறுதியாக கூறினார். இதனையடுத்து காதல் ஜோடிகளை போலீசார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    ×