என் மலர்
நீங்கள் தேடியது "கழிவு நீர் தொட்டி"
- குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்படாத கழிவு நீர் தொட்டி உள்ளது.
- இந்த தொட்டி நான்கு அடி ஆழம் உள்ளதால் குழந்தைகள் தவறி விழந்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள தேவி நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்படாத கழிவு நீர் தொட்டி உள்ளது.
இதன் மூலமாக அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்படும் அவலம் உள்ளது. மேலும் இந்த தொட்டி நான்கு அடி ஆழம் உள்ளதால் குழந்தைகள் தவறி விழந்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளதால், அக் கழிவு நீர் தொட்டியை கான்கிரீட் பலகையால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக மூங்கில்துறைப்பட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதி செயலாளர் சிராஜ்தீன் கோரிக்கை வைத்துள்ளார்.
- செந்தில் குமாருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார்.
- மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் அருகே தட்சூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். ஜெயஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செந்தில் குமார் மற்றும் இவரது மனைவி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர். இதனையடுத்து வேலைக்கு சென்ற செந்தில்குமார் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த மகள் ஜெயஸ்ரீயை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
செந்தில்குமார் அதே பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டிவருகிறார். உடனே அங்கு சென்று ஜெயஸ்ரீயை தேடினார். அப்போது அந்த வீட்டில்கழிவு நீர் தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. வீட்டின் அருகே வேலைக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்து கிடந்தார்.
இதை பார்த்த ஜெயஸ்ரீயின் தாய் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு தண்ணீரில் விழுந்ததால் மயக்கத்தில் இருக்கலாம் என்று ராமநத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
- சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்று பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடினான்.
தாராபுரம்:
தாராபுரம் பழனி ரோட்டில் தாசநாயக்கன்பட்டி அருகே தனியார் டெக்ஸ்டைல் மில் உள்ளது . இந்த மில்லில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர் தொழிலாளர்களுக்கான குவாட்டர்ஸ் அதே பகுதியில் உள்ளது.
ஒடிசா மாநிலம் சாந்தாமாஜி என்பவர் குடும்பத்துடன் குவாட்டர்ஸ்ஸில் தங்கிவேலை செய்து வருகிறார. மதிய உணவு வேளையில் சாந்தாமாஜி வீட்டுக்கு சென்றபோது அவரது மூன்று வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்று பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடினான்.
அப்போது அங்கு இருந்த கழிவு நீர் தொட்டி மீது ஏறி இருவரும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென தொட்டி மூடி உடைந்து இருவரும் கழிவு நீர் தொட்டியில் விழுந்தனர். அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக இருவரையும்மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தாமாஜியின்3 வயது மகன் உயிரிழந்து விட்டதாக கூறினர். மற்றொரு சிறுவனுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த சிறுவனின் பிணம் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தாராபுரம் அலங்கியம்எஸ்.ஐ சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் மாணவி லியா லட்சுமியின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கழிவு நீர் தொட்டியில் விழுந்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை காவல் துறைக்கு மருத்துவக் கல்லூரியில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.