என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்னாட்டு தாய்மொழி நாள் விழா"

    • பேராவூரணியில் அரசு பள்ளியில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா நடை பெற்றது.
    • உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி,

    பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.

    பெரியகக்திகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மேரிமேகலா தலைமை வகித்தார்.

    பேராவூரணி வடகிழக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமை வகித்தார். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்வில் சின்னப்ப தமிழர், மருத்துவர் நீலகண்டன், திருக்குறள் பேரவை தலைவர் நீல கண்டன், தமிழ் வழி கல்வி இயக்க இணைச்செயலாளர் வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் பழனிவேல், சிவக்குமார், ஆயர் ஜேம்ஸ், சித.திருவேங்கடம், பாரதி ந.அமரேந்திரன், கல்வியாளர் சீ.கௌதமன், மருத.உதயகுமார், அரிமா சங்க பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் அருண்குமார், காஜா முகைதீன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×