search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்பன் கொலை"

    • பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கரூர்

    கரூர் தெற்கு காந்திகிராமம் அருகே உள்ள கம்பன் தெருவில் வசித்து வந்தவர் செந்தில் குமார். இவரது மகன் ஜீவா (வயது 20). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த வாரம் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த அவர் கடந்த 22-ந் தேதி திடீரென மாயமானார்.

    இது குறித்து அவரது தாய் சுந்தரவல்லி, தான்தோன்றி மலை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    அதன் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காந்திகிராமம் அருகே உள்ள இ.பி. காலனி பகுதியை சேர்ந்த சசிக்குமாருக்கும் மாயமான வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் சசிகுமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து ஜீவாவுக்கு மது வாங்கி கொடுத்து, கரூர் அருகில் உள்ள தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

    பின்னர், கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் தாசில்தார் முன்னிலையில் ஜீவாவின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது அவரது உடல் 7 துண்டுகளாக வெட்டி புதைக்கப்பட்டிருந்தது என்று அதிர்ச்சி தகவல் வெளியானது.

    பின்னர், போலீசார் முக்கிய குற்றவாளியான சசிகுமார் மற்றும் அவரது நண்பர் சுதாகர் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை வலை வீசி தேடுகின்றனர்.

    கைதான சசிகுமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    கரூர், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் நெருங்கிய நண்பன் நான். அவருடன் ஜீவாவுக்கும் பழக்கம் இருந்தது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.

    அதன் பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது ஜீவா அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததுவிட்டதாக கூறப்படுகிறது. என் நெருங்கிய நண்பரை கொன்று விட்டதால் அவர் மீது கோபம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜீவா எனது தலையை சிதைத்து விடுவேன் என இன்ஸ்டா கிராமில் பதிவிட்டார். இதைப் பார்த்ததும் எனக்கு அவன் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் அவ்வப்போது கனவில் வந்து, என்னை கொலை செய்த ஜீவாவை இதுவரைக்கும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய் என்றும், அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்றும் கூறியதாக சொன்னார். இதனால் அவனை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து காத்திருந்தோம்.

    கடந்த வாரம் விடுமுறையில் வந்த ஜீவாவை நண்பர்கள் மூலமாக மது அருந்த அழைத்து திட்டமிட்டபடி வெட்டி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்தோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினேஷ் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார்.
    • முரளி கிருஷ்ணாவை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து கர்னூல் தாலுகா போலீசில் கடந்த 16-ந் தேதி புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கண்ணூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினேஷ் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார்.

    காதலியுடன் தனிமையில் இருக்கும்போது அவரை தனது செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்து வைத்திருந்தார்.

    தினேஷின் நண்பர் முரளி கிருஷ்ணா (வயது 22). இவர் பூக்கடையில் வேலை செய்து வந்தார். தினேஷின் செல்போனை வாங்கி பார்த்த முரளி கிருஷ்ணா அதில் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதில் சபலம் அடைந்த அவர் செல்போனில் இருந்த நண்பனின் காதலியின் நிர்வாண வீடியோக்களை தனது செல்போனுக்கு அனுப்பி கொண்டார்.

    இதையடுத்து தினேஷின் காதலிக்கு போன் செய்த முரளி கிருஷ்ணா தனது ஆசைக்கு இணங்க வேண்டும் மறுத்தால் நிர்வாண வீடியோக்களை உன்னுடைய உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

    முரளி கிருஷ்ணாவின் மிரட்டலை கேட்டு பயந்த இளம்பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இளம்பெண்ணை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் தினேஷுக்கு தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ் முரளி கிருஷ்ணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி தனது நண்பரான கிரண்குமாரை அணுகி நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

    இதையடுத்து கடந்த மாதம் 25-ந் தேதி நண்பர் கிரண்குமாருடன், முரளி கிருஷ்ணா வீட்டிற்கு சென்று மது அருந்தலாம் என கூறி பைக்கில் வைத்து புறநகர் பகுதியான பஞ்சலிங்கா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளி கிருஷ்ணாவை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முரளி கிருஷ்ணா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது பிணத்தை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வரும் வழியில் உடைகளை கழற்றி விட்டு பிணத்தை நிர்வாணமாக நன்னூறு சுங்கச்சாவடி அருகே உள்ள அந்திரி நீவா கால்வாயில் வீசினர்.

    இதையடுத்து உடைகளை ஒரு இடத்திலும், செல்போனை ஒரு இடத்திலும் வீசிவிட்டு வீட்டிற்கு சென்றனர். வெளியே சென்ற மகன் வீட்டிற்கு வராததால் அவரை பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடிப் பார்த்தனர்.

    இருப்பினும் முரளி கிருஷ்ணாவை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து கர்னூல் தாலுகா போலீசில் கடந்த 16-ந் தேதி புகார் செய்தனர். முரளி கிருஷ்ணாவை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தினேஷ் குமாரை பிடித்து விசாரணை செய்தபோது முரளி கிருஷ்ணா கொலை செய்து அந்திரிநீவா கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் அவரது நண்பர் கிரண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கால்வாயில் வீசப்பட்ட முரளி கிருஷ்ணாவின் உடலை தேடி வருகின்றனர்.

    ×