என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை திருமணம் நிறுத்தம்"

    • குழந்தை திருமண சட்டத்தின்படி 18 வயதுக்குள் பெண்ணுக்கும், 21 வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்ய கூடாது.
    • திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பூசாரி முதல் அனைத்து உறவினர்கள், பங்கேற்பவர்கள், திருமணத்திற்கு இடம் அளிப்பவர்கள் என அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள்.

    அன்னூர்:

    அன்னூர் வட்டாரத்தில் குழந்தை திருமணம் நடப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அன்னூர் வட்டார சமூக நல பிரிவு அலுவலர் வள்ளி, கிராம சேவகர்கள் லட்சுமி, ராஜாமணி, சைல்டு லைன் நிர்வாகி கல்பனா ஆகியோர் புகார் வந்த காரே கவுண்டன்பாளையம், அச்சம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், செந்தாம்பாளையம், கஞ்சப்பள்ளி, அல்லிகுளம் என 4 இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இந்த 4 கிராமங்களிலும் 14, 15, 16, 17 வயது குழந்தைகளுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, குழந்தைகளின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அவர்களிடம் இதுபோன்று செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

    மேலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடியும் வரை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என உறுதி மொழி எழுதி வாங்கி விட்டு வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

    குழந்தை திருமண சட்டத்தின்படி 18 வயதுக்குள் பெண்ணுக்கும், 21 வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்ய கூடாது. திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பூசாரி முதல் அனைத்து உறவினர்கள், பங்கேற்பவர்கள், திருமணத்திற்கு இடம் அளிப்பவர்கள் என அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள். மணமகன் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்படும்.

    தற்போது நடக்க இருந்த 4 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது பெற்றோரை எச்சரித்து உரிய அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி உள்ளோம். தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகிறோம்.

    18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைக்கு திருமணம் நடந்தால் அந்த பெண் தோழிகள், அண்டை வீட்டார் என யாராக இருந்தாலும் உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

    தொலைபேசியில் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், முகவரி ரகசியம் பாதுகாக்கப்படும். இத்துடன் 1091, 181 ஆகிய எண்களிலும் தகவல் தெரிவிக்கலம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வாலிபரின் இந்த கொடூர செயல் குறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
    • குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட சந்தோஷத்தில் இருந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    1978-ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும்.

    குழந்தை திருமண தடை சட்டம் அமலில் இருக்கும் நிலையில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 16 வயது சிறுமியுடன் 32 வயதுடைய வாலிபருக்கு திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து அச்சிறுமியின் நிச்சயதார்த்தை நிறுத்தியுள்ளனர்.

    பின்னர் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்ட விரக்தியில் இருந்த வாலிபர், அன்று இரவே கொடூரச் செயலை அரங்கேற்றினார். திருமணம் நிறுத்தப்பட்ட கோபத்தில், சிறுமியில் வீட்டிற்கு சென்ற அந்த வாலிபர், சிறுமியை கொலை செய்து தலையை கையோடு எடுத்துச் சென்றுள்ளார்.

    வாலிபரின் இந்த கொடூர செயல் குறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட சந்தோஷத்தில் இருந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர்.
    • திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தந்தையை இழந்த 16 வயதான சிறுமி அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உறவுக்காரர் ஒருவரை அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் முடிவு செய்தார். அதை விரும்பாத அந்த சிறுமி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தார்.

    ஆனால் எவ்வளவோ மறுத்தும் கண்டுகொள்ளாமல் உறவினருடான திருமண வேலைகளை குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் தவித்த அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு பேசி தன் நிலையை தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெள்ளகோவில் விரைந்து சென்றனர்.

    பின்னர் சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது சட்டப்படி வயது வராமல் பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து அந்த சிறுமியுடன் குடும்பத்தினரை திருப்பூர் அலுவலகத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×