search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னை ஆலய ம்"

    • கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமா தான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை புகழ் மாலை

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி தேவச காயம் மவுண்டில் மறை சாட்சி புனித தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திரு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு திருப்பலியும், 11 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடை பெற்றது. இதில் கோட்டார் மறைவட்ட வட்டார முதல் வர் ஆனந்த் தலைமையில், கோட்டார் மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப் பாளர் பெனிட்டோ மறை யுரை ஆற்றினார். பிற்பகல் 3 மணிக்கு திருவிழா வர வேற்பு மேளம் முழங்கியது.

    அதனைத்தொடர்ந்து கொடி நேர்ச்சையும் ஜெபமா லையும், புகழ்மாலையும் நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர் வலமாகவந்து கொடி யேற்றம் நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீ பன் தலை மையில் திருப்பலி நடந்தது. கொடியேற்ற நிகழ்ச் சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணை பங்குதந்தை ரெக் வின், பங்கு பேரவை துணைத்தலைவர் சிலுவை தாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் மற் றும் கவுன்சிலர் ஜெனட்சதீஷ் குமார், துணைச்செயலாளர் சகாய செலீன், கோட்டார் மறைமாவட்ட பேரவை உறுப்பினர் ஜேக்கப் மனோக ரன், முன்னாள் பங்கு பேரவை துணைத்தலைவர் கள் பயஸ் ராய், மிக்கேல், முன்னாள் கவுன்சிலர் சதீஷ் குமார், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமா தான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை புகழ் மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் திருவிழாவன்று நற்க ருணை பவனி நடக்கிறது. 9-ம் திருவிழாவையொட்டி (சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கையும், அதனைத் தொடர்ந்து தேர்ப்பவனியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப் பலி, மாலை தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வர லாற்று நாடகம் ஆகி யவை நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடு களை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட் பங்கு மக்கள், பங்கு அருட் பணி பேரவையினர் மற்றும் அருட்சகோதரிகள் செய் துள்ளனர்.

    ×