search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கே"

    • ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
    • 2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

    ஜம்மு-காஷ்மீர்  தேர்தல் 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜகவும், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 4-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனி

    காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே இந்த விவகாரம் பிரதான பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை மோடி ஏமாற்றி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏமாற்றுதல் என்பதே ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் விஷயத்தில் பாஜக கடைப்பிடிக்கும் ஒரே கொள்கை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனிக்கு இங்கிருந்து வெளியேறும் கதவை இளைஞர்கள் நிச்சயம் காண்பிப்பார்கள். கடந்த மார்ச் மாத நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.

     

     

    2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. பணியில் உள்ள 60,000 அரசு ஊழியர்களுக்கும் நாளொன்றுக்கு ரூ.300ம் என்ற வீதமே வருமானம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பலருக்கு பணி உறுதி செய்யப்படாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர். விவசாயம், மருத்துவம், என அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

    • 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்த்தவர்கள் பலாத்கார வாதிகள் என்றும் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்றும் பாஜக எம்.பி கூறுகிறார்
    • உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார்.

    பாலியல் பலாத்காரங்களும் தூக்கில் தொங்கிய உடல்களும்

    பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தை வங்கதேச வன்முறையோடு ஒப்பிட்டு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சர்ச்சையில் சிக்கியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. போராட்டத்தில் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. எங்கும் சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது, இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என்று கங்கனா பேசியுள்ளார்.

     வெட்ட வெளிச்சம் 

    விரைவில் அரியானா சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் கங்கானாவின் இந்த கருத்துக்கு பாஜக மேலிடமே கண்டனம் தெரிவித்துள்ளது. தான் பேசியதற்கு கங்கனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கங்கானாவின் கருத்து பாஜகவின் விவசாயிகளுக்கு எதிரான மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். 

     

    கீழ்த்தரமான கருத்து 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் தள பதிவில், அளித்த வாக்குறுதிகளை நிறவேற்றத் தவறிய மோடி அரசின் பிரச்சார இயந்திரம் விவசாயிகளை தொடர்ச்சியாக அவமானப் படுத்தி வருகிறது. தங்களின் 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்த்தவர்கள் பலாத்கார வாதிகள் என்றும் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்றும் ஒரு பாஜக எம்.பி கூறுவது பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுள்ள மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட பெருத்த அவமானம் ஆகும். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உருவாக்கிய கமிட்டி இன்னும் செயல்படாமல் உறைந்து கிடக்கிறது. இதுநாள் வரை தங்களின் நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இன்றைய தேதி வரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதற்கெல்லாம் உச்சமாக விவசாயிகளைத் தவறாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று கடுமையாக சாடியுள்ளார்

     

    பாஜகவின் மரபணு

    கங்கனா ரணாவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியே பாராளுமன்றத்தில் வைத்து விவசாயிகளை கிளர்ச்சிக்காரர்கள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் கீழ்த்தரமாகப் பேசினார். பொய்யான வாக்குறுதிகளால் விவசாயிகளை ஏமாற்ற முற்பட்டார். உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார். எனவே மோடி அரசின் மரபணுவிலேயே ஊறியுள்ள இந்த விவசாய எதிர்ப்பு மனநிலை கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

    மதவாத ஆங்கிலேய கைக்கூலிகள் 

    கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு அகில இந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) விவசாய சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா, காலநிலை என எல்லாவற்றையும் தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 736 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால் சுதந்திரப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்து, ஆங்கிலேயர் பக்கம் நின்ற மதவாத கைக்கூலிகளுக்கு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் தேசபக்தி குறித்து கேள்வியெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்துகளுக்காகப் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் தெரிவித்தார். 

    • சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால்....
    • நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது.

    காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி 240 இடங்களில் வெற்றி பெற்றது. 32 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும்.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் வெற்றியை பெற இந்தியா கூட்டணி கடுமையாக உழைக்க தீர்மானித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, கட்சி தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவை தேர்தில் நாம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் மற்ற சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால் ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்.

    இதற்காகத்தான் நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது. களப்பணியை செய்வதை தவிர்த்து நாம் பேசிக் கொண்டிருந்தால் அது நிறைவேறாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மீட்டெடுப்பதற்கு வெற்றி முக்கியமானது. வெற்றி பெற்றால் மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும். வெற்றி பெற்றால் சட்ட மன்றம் திரும்பும். வெற்றி பெற்றால் மாவட்டம், ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    • மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரின் எக்ஸ் பதிவில், "காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தனது கட்சி தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், "கார்கே அவர்களுக்கு மிகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அயராத சேவையும், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நீண்ட ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்க வேண்டுமென்று அன்புடன் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசினார். அப்போது, "ஹத்ராஸ் போன்ற கூட்டநெரிசல் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், இத்தகைய போலி சாமியார்களை சமாளிப்பதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

    போலி சாமியார்களால் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் குருட்டு நம்பிக்கையில் கலந்து கொள்கின்றனர். இத்தகைய மத நிகழ்ச்சிகளை நாம் ஒழுங்குபடுத்தவேண்டும். இத்தகைய கூட்டங்கள் எங்கு நடத்த வேண்டும். எவ்வளவு பரப்பளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடத்தும் இடத்திற்கு அருகில் மருத்துவமனை இருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும்.

    இப்போது பல போலி சாமியார்கள் சிறையில் இருக்கின்றனர். மத கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த சட்டமும் இல்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து மக்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்படவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • கருணாபுரத்தில் அதிகளவில் தலித் மக்கள் வசிக்கின்றனர்.
    • இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் திமுக அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய மரணங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கார்கேவுக்கு ஜே.பி நட்டா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "திமுக - இந்தியா கூட்டணிக்கும் சட்டவிரோத சாராய மாபியாவுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்திருந்தால் கள்ளச்சாராயத்தால் பலியான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

    கருணாபுரத்தில் அதிகளவில் தலித் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் வறுமை மற்றும் பாகுபாடு காரணமாக பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு நிகழ்ந்த இத்தகைய பேரழிவு குறித்து காங்கிரஸ் கட்சி ஏன் அமைதி காக்கிறது.

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை பதவியை விட்டு நீக்கவும் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் திமுக அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்க வேண்டும் அல்லது அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்" என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?.
    • மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.

    நீட் தேர்வுக்கான பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டதில் இது தெரிய வந்ததாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் நீட் ஊழல் வியாபம் 2.0 என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றால்தான் 24 லட்சம் மாணவர்களில் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    நீட் ஊழல் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.

    நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?. பேப்பரை பரிமாற்றிக் கொள்வதற்காக 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மாபியா கும்பல், அமைப்புகள் ஈடுபட்டத்தை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளிப்படுத்தவில்லையா?.

    நீட் மோசடி கும்பல் குஜராத் மாநிலம் கோத்ராவில் பிடிபடவில்லையா? குஜராத் போலீஸின் தகவல்படி, பயிற்சி மையம் நடத்தியவர், ஆசிரியர், மற்றொரு நபர் ஆகியோருக்கு இடையில் 12 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது.

    அரசு கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்களில் 55 ஆயிரம் இடங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த முறை மோடி அரசு என்டிஏ-வை தவறாக பயன்படுத்தி மார்க் மற்றும் தரவரிசையில் மோசடி செய்துள்ளது. இதனால் ஒதுக்கீடு இடங்களுக்கான கட்ஆஃப் மார்க் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன.
    • எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப்புறங்களில் காங்கிரஸ் இடங்களை பிடித்தது.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில் "இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன. விடாமுயற்சி, உறுதியுடன் எந்த எதிரியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப்புறங்களில் காங்கிரஸ் இடங்களை பிடித்தது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும். மக்களை தேர்தலில் காங்கிரசின் மீது நம்பிக்கை வைத்து சர்வாதிகார, அரசியலமைப்பு எதிர்ப்பு சக்திகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்" கார்கே தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. சசி தரூர், டி.கே. சிவக்குமார் உள்ளி்ட்ட தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 15 நாட்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறை எடுத்துள்ளார்.
    • அவருடைய பெயரை 758 முறை பயன்படுத்தியுள்ளார்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த தேர்தலின் பிரசாரத்தில் பிரிவினையை தூண்டும் வகையிலும், மதம் தொடர்பாகவும் தலைவர்கள் வாக்கு சேகரித்த நிகழ்வு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜனதா கூட்டணி சார்பிலும், இந்தியா கூட்டணி சார்பிலும் மாறிமாறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சாதி மற்றும் மதம் அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி 421 முறை கோவில்- மசூதி, பிரிவினை பற்றி பேசியுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் 421 முறையை கோவில்-மசூதி, பிரிவினை பற்றி பேசியுள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறை எடுத்துள்ளார். அவருடைய பெயரை 758 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் வேலைவாய்ப்பின்மையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    ஜூன் 4-ந்தேதி மாற்று அரசை அமைப்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா கூட்டணி முழுப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். எங்களுடைய பார்வையில் இந்த அரசு (மோடி தலைமையிலான மத்திய அரசு) இன்னொரு முறை வாய்ப்பு பெற்றால், அது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • போதைப்பொருள் பிரச்சனை பஞ்சாபில் இன்று கூட இருந்து வருகிறது. அது அதிகரித்து கொண்டிருக்கிறது.
    • அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    ராகுல் காந்தி இன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா காங்கிரஸ் வேட்பாளர் அமரிந்தர் சிங்கை ஆதரித்து தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    போதைப்பொருள் பிரச்சனை பஞ்சாபில் இன்று கூட இருந்து வருகிறது. அது அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பஞ்சாப் முழு அதிகாரம் மற்றும் ஆக்ரோசத்துடன் போதைப்பொருளுக்கு எதிராக போராட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக நேற்று மல்லிகார்ஜூன கார்கே, "பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலத்திற்கு போதைப்பொருள் பிரச்சனை மிகப்பெரிய சவாலாகியுள்ளது. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் நிலைத்தை விற்று, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் ஒவ்வொருவரும் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" எனக் கூறியிருந்தார்.

    காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமையினா ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • அவர்களால் அரசு கூட அமைக்க முடியாது. 200 இடங்களை தாண்டி அவர்களால் பிடிக்க முடியாது.
    • பா.ஜனதா மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கடும் போட்டி நிலவுகிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாரஜூன கார்கே இன்று அமிர்தசரஸ் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறது. ஆனால், அவர்களுடைய சீட் எண்ணிக்கை குறையும்போது, எங்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும். 400 இலக்கை அவர்கள் மறந்துவிட வேண்டியதுதான். அது அர்த்தமற்றது. அவர்களால் அரசு கூட அமைக்க முடியாது. 200 இடங்களை தாண்டி அவர்களால் பிடிக்க முடியாது.

    பா.ஜனதா மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கடும் போட்டி நிலவுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி 400 இடங்கை பிடிக்க முடியும்.

    நான் அரசியலில் இணைந்தது பதவிக்காக இல்லை. நான் சிறுவயதில் இருந்து, மோடி வயதை காட்டிலும் கிட்டதட்ட அதிக ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இருக்கிறேன். இதனால் எனதை பதவியை பற்றி யோசிக்காமல், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவருடைய பதவி குறித்து அமித் ஷா யோசிக்க வேண்டும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
    • "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27 அன்று தனது 74வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

    இந்நிலையில், இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, நேருவை நினைவு கூர்ந்த கார்கே, "நவீன இந்தியாவின் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றவர். ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் நமது உத்வேகத்தின் ஆதாரம்" என குறிப்பிட்டுள்ளார்.

    "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    பண்டித ஜவஹர்லால் நேரு கூறியது - "நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் ஒற்றுமை நமது தேசிய கடமையாகும்.

    நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளைப் பேசலாம், ஆனால் அது நமக்குள் ஒரு சுவரை உருவாக்கிவிடக் கூடாது. எல்லா மக்களும் முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.

    நம் நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இன்றும் காங்கிரஸ் கட்சியும் அதே நீதியின் பாதையையே பின்பற்றுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×